குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

நாளை தமிழ்நாடு வருகிறார் குடியரசு துணைத் தலைவர் திரு சி.பி. ராதாகிருஷ்ணன் உபாசி தேயிலை ஆராய்ச்சி அறக்கட்டளையின் நூற்றாண்டு மாநாட்டில் பங்கேற்கிறார்

இடுகை இடப்பட்ட நாள்: 20 SEP 2026 4:48PM by PIB Chennai

குடியரசு துணைத் தலைவர் திரு சி.பி. ராதாகிருஷ்ணன், நாளை (2026 செப்டம்பர் 21) தமிழ்நாடு வருகிறார். நீலகிரி மாவட்டம் குன்னூரில் நடைபெறும் உபாசி (UPASI) எனப்படும் தென்னிந்திய தேயிலை தோட்ட உரிமையாளர் சங்க தேயிலை ஆராய்ச்சி அறக்கட்டளையின் (உபாசி டிஆர்எஃப்) நூற்றாண்டு மாநாட்டில் தலைமை விருந்தினராக அவர் பங்கேற்கிறார்.

தென்னிந்தியாவின் தேயிலைத் தொழிலுக்குச் சேவையாற்றும் முதன்மையான அறிவியல் ஆராய்ச்சி நிறுவனமான, உபாசி தேயிலை ஆராய்ச்சி அறக்கட்டளை (உபாசி டிஆர்எஃப்), 1926 அக்டோபரில் கூடலூரில் தேயிலை சோதனை நிலையமாக நிறுவப்பட்டது.


***

(Release ID: 2312708)

TV/PLM/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2312736) வருகையாளர் எண்ணிக்கை : 17
இந்த வெளியீட்டை படிக்க: Malayalam , Urdu , English , हिन्दी , Gujarati