பிரதமர் அலுவலகம்
மத்தியப் பிரதேசத்தின் ரேவாவில் நி்கழ்ந்த விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு பிரதமர் இரங்கல்
இடுகை இடப்பட்ட நாள்:
02 SEP 2026 7:46PM by PIB Chennai
மத்தியப் பிரதேசத்தின் ரேவாவில் நிகழ்ந்த விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (02.09.2026) ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்குத் தமது இரங்கலைத் தெரிவித்துள்ள பிரதமர், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்வதாகக் கூறியுள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
"மத்தியப் பிரதேசத்தின் ரேவாவில் நடந்த விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகள் வருத்தமளிக்கிறது. தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுடன் என் எண்ணங்கள் உள்ளன. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையப் பிரார்த்திக்கிறேன்"
(Release ID : 2306091)
****
SS/PLM/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2306131)
வருகையாளர் எண்ணிக்கை : 11