பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ராஜ்காட்டில் மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் மரியாதை

प्रविष्टि तिथि: 15 AUG 2026 10:12AM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று ராஜ்காட்டில் மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தி, தேசத்தந்தையின் தொலைநோக்குப் பார்வையிலிருந்தும், பணிகளிலிருந்தும் நாடு எப்போதும் உத்வேகம் பெறும் என்று குறிப்பிட்டார்.

ஒவ்வொரு இந்தியரின் முன்னேற்றத்திற்காகவும், நாட்டின் வளர்ச்சிக்கும் செழிப்புக்கும் தொடர்ந்து பாடுபடுவதற்கான உறுதிப்பாட்டைப் பிரதமர் மீண்டும் வலியுறுத்தினார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டதாவது:

“இன்று காலை ராஜ்காட்டில் மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினேன். அவரது தொலைநோக்குப் பார்வையிலிருந்தும் பணிகளிலிருந்தும் நாம் எப்போதும் தொடர்ந்து உத்வேகம் பெறுவோம். ஒவ்வொரு இந்தியரின் முன்னேற்றத்திற்காகவும், நமது நாட்டின் வளர்ச்சிக்கும் செழிப்புக்கும்  நாம் தொடர்ந்து பாடுபடுவோம்.”

****

SS/RB/RJ


(रिलीज़ आईडी: 2299834) आगंतुक पटल : 13
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Urdu , English , Marathi , हिन्दी , Manipuri , Bengali , Assamese , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam