PIB Backgrounder
அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி: கிராமப்புற, பழங்குடியின மக்களின் நல்வாழ்வு, அதிகாரமளித்தல்
प्रविष्टि तिथि:
13 AUG 2026 12:27PM by PIB Chennai
இந்தியாவின் வளர்ச்சிப் பயணம் கிராமப்புற, பழங்குடியின மக்களின் வாழ்க்கை முறையையும், அவர்களுக்கான வாய்ப்புகளையும் மாற்றி அமைத்து வருகிறது. அடிப்படை சேவைகள் முதல் உள்கட்டமைப்பு, வாழ்வாதார நடவடிக்கைகள், திறன் மேம்பாடு, கல்வி, நிதிப் பாதுகாப்பு வரை பல்வேறு நடவடிக்கைகளின் மூலம் கிராமப்புற இந்தியாவின் அடித்தளம் பலப்படுத்தப்பட்டு வருகிறது. பெண்கள், பழங்குடியின மக்கள், நலிவடைந்த பிரிவினர் ஆகியோரின் நலனுக்காக மேற்கொள்ளப்படும் சிறப்பு முயற்சிகள் அவர்களின் சமூக மரியாதையை உறுதிசெய்து அவர்களுக்கு அதிகாரமளிக்கின்றன. நிதிப் பகிர்வு முறையில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. இதன் மூலம், கிராம ஊராட்சிகளுக்கான நேரடி நிதி ஒதுக்கீடு 15-வது நிதி ஆணையத்தின் கீழ் வழங்கப்பட்ட 2.36 லட்சம் கோடி ரூபாயிலிருந்து, 16-வது நிதி ஆணையத்தின் காலத்தில் 4.35 லட்சம் கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. கிராமப்புற வளர்ச்சிக்கான நிதி ஒதுக்கீடு 2016-17-ல் 87,765 கோடி ரூபாயிலிருந்து 2026-27-ல் 2.73 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இதே காலகட்டத்தில் பழங்குடியின விவகாரத்துறைக்கான நிதி ஒதுக்கீடு 4,826 கோடி ரூபாயிலிருந்து 15,421.97 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
கிராமப்புறங்களில் வசிக்கும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் பாதுகாப்பான குடிநீர் வழங்குவதற்காகத் தொடங்கப்பட்ட ஜல் ஜீவன் இயக்கம் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இத்திட்டத்தால், குழாய் மூலம் குடிநீர் பெறும் குடும்பங்களின் எண்ணிக்கை 2019 ஆகஸ்ட் மாதத்தில் 3.23 கோடியிலிருந்து 2026 ஆகஸ்ட் நிலவரப்படி 15.91 கோடிக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. தூய்மை இந்தியா இயக்கத்தின் கீழ், கிராமப்புறங்களில் 12.19 கோடிக்கும் மேற்பட்ட தனிநபர் கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. இதன் தொடர்ச்சியாக 2019-ம் ஆண்டில் திறந்தவெளியில் மலம் கழித்தலற்ற நாடாக இந்தியா அறிவிக்கப்பட்டது. கோபர்தன் திட்டத்தின் கீழ் பயிர்க் கழிவுகள், விலங்குக் கழிவுகளைப் பயன்படுத்தி உயிரி எரிவாயு தயாரிக்கும் நிலையங்கள் பெருமளவில் செயல்பாட்டுக்கு வந்துள்ளன. பிரதமரின் உஜ்வாலா திட்டத்தின் மூலம் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களைச் சேர்ந்த பெண்களுக்கு 10.57 கோடிக்கும் அதிகமான இலவச சமையல் எரிவாயு இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. நாட்டில் உள்ள ஒட்டுமொத்த சமையல் எரிவாயு இணைப்புகளின் எண்ணிக்கை 2014-ல் 14.52 கோடியிலிருந்து 2026-ல் 33.39 கோடியாக உயர்ந்துள்ளது.
அனைத்து கிராமங்களுக்கும் மின்சார வசதியை வழங்கும் நோக்கில் சௌபாக்யா திட்டம் செயல்படுத்தப்பட்டு 100 சதவீத மின்மயமாக்கல் இலக்கு எட்டப்பட்டுள்ளது. ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் மூலம் 45.51 கோடிக்கும் அதிகமான ஆயுஷ்மான் சுகாதார அட்டைகள் வழங்கப்பட்டுள்ளதோடு, 1.86 லட்சத்திற்கும் மேற்பட்ட ஆயுஷ்மான் ஆரோக்கிய மையங்கள் கிராமப்புற மக்களுக்கும் தரமான மருத்துவச் சேவைகளை வழங்கி வருகின்றன. ஏழை எளிய மக்களின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், பிரதமரின் ஏழைகள் நல்வாழ்வு உணவு தானிய திட்டத்தின் கீழ் 81.35 கோடிக்கும் அதிகமான பயனாளிகளுக்கு இலவச உணவு தானியங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. நியாய விலைக் கடைகள் முழுவதும் தானியங்கிமயமாக்கப்பட்டு, ‘ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை’ திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
பழங்குடியின மக்களின் வளர்ச்சிக்காகப் பிரதமரின் ஜன்மன் திட்டம், பிரதமரின் பழங்குடியினர் வளர்ச்சித் திட்டம் போன்ற சிறப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் மூலம் ஆயிரக்கணக்கான பழங்குடியினர் வளர்ச்சி மையங்கள் அமைக்கப்பட்டு, லட்சக்கணக்கான பழங்குடியின மக்கள் பயனடைந்துள்ளனர். ஏகலைவா மாதிரி உண்டு உறைவிடப் பள்ளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு ஆயிரக்கணக்கான பழங்குடியின மாணவ மாணவிகளுக்குத் தரமான கல்வி வழங்கப்பட்டு வருகிறது. இத்தகையத் திட்டங்கள் கிராமப்புற, பழங்குடியின சமூகங்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, இந்தியாவின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு பங்களித்து வருகின்றன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2298755®=3&lang=1
***
SS/PD/KR
(रिलीज़ आईडी: 2298865)
आगंतुक पटल : 15