சுரங்கங்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்தியப் புவியியல் ஆய்வு மையத்தின் முதல் பெண் தலைமை இயக்குநராக திருமதி வர்ஷா அசோக் அக்லாவே பொறுப்பேற்பு

प्रविष्टि तिथि: 31 JUL 2026 8:09PM by PIB Chennai

இந்திய புவியியல் ஆய்வு மையத்தின் (GSI) 54-வது தலைமை இயக்குநராக திருமதி வர்ஷா அசோக் அக்லாவே பொறுப்பேற்றுள்ளார். இதன் மூலம், இந்தியாவின் முதன்மையான புவி அறிவியல் சார்ந்த இந்த அமைப்பின் 176 ஆண்டுகால வரலாற்றில், இதற்குத் தலைமை தாங்கும் முதல் பெண்மணி என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். 2024 ஜூலை 27 முதல் 2026 ஜூலை 31 வரை தலைமை இயக்குநராகப் பணியாற்றிய திரு அசித் சாஹாவிற்குப் பின், திருமதி வர்ஷா இந்தப் பொறுப்பை ஏற்றுள்ளார்.

மூன்று தசாப்தங்களுக்கும் மேலான பணி அனுபவம் கொண்ட ஒரு சிறந்த புவி அறிவியல் நிபுணரான திருமதி அக்லாவே, இந்தியச் சுரங்க நிறுவனத்தில் பணியாற்றிய பின் 1992-ல் இந்தியப் புவியியல் ஆய்வு மையத்தில் இணைந்தார். தனது பணிவாழ்வில், ஜிஎஸ்ஐ-ன் மத்தியத் தலைமையகத்தில் பணியாற்றி மத்திய, வடக்கு மற்றும் கிழக்கு மண்டலங்களிலும் பல்வேறு முக்கிய அறிவியல் மற்றும் நிர்வாகப் பொறுப்புகளை அவர் வகித்துள்ளார். தற்போதைய பதவியை ஏற்பதற்கு முன், அவர் கொல்கத்தாவில் உள்ள கிழக்கு மண்டலத்தின் கூடுதல் தலைமை இயக்குநர் மற்றும் துறைத் தலைவராகப் பணியாற்றினார்.

பதவியேற்ற திருமதி அக்லாவே, முக்கிய கனிம ஆய்வு மற்றும் கனிமப் பாதுகாப்பு ஆகியவற்றில் இந்திய அரசின் முன்னுரிமைகளுக்கு ஏற்ப தனது திட்டங்களைச் சீரமைப்பதில் ஜிஎஸ்ஐ-யின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார். மேம்பட்ட புவி இயற்பியல் ஆய்வுகள், துரிதப்படுத்தப்பட்ட ஆய்வுத் திட்டங்கள் மற்றும் வலுப்படுத்தப்பட்ட ஆய்வக உள்கட்டமைப்பு ஆகியவற்றின் மூலம் ஆழ்கடலில் புதைந்துள்ள மற்றும் மறைந்திருக்கும் கனிமப் படிவங்களின் ஆய்வை விரைவுபடுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2292720&reg=3&lang=1

---

TV/BR/SE


(रिलीज़ आईडी: 2292815) आगंतुक पटल : 18
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Telugu