மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கடலோர மீன்வளத்தில் பெண்களுக்கான நீலப் பொருளாதார உத்தி

प्रविष्टि तिथि: 30 JUL 2026 3:05PM by PIB Chennai

ஆந்திரப் பிரதேசம் உட்படக் கடலோரப் பகுதிகளைச் சேர்ந்த பெண்களை மையமாகக் கொண்டு, பிரதமரின் மீன் வளத் திட்டத்தின் கீழ் உள்ள நீலப் பொருளாதாரக் கொள்கைக் கட்டமைப்பில் பெண்களின் வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத் தேவைகள் வெளிப்படையாக ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. இத்திட்டம் பெண்களை முன்னுரிமைப் பயனாளிக் குழுவாக அங்கீகரிப்பதோடு, மீன்வளம் மற்றும் நீர்வாழ் உயிரினப் வளர்ப்புத் துறையில் அவர்களின் பங்கேற்பு மற்றும் அதிகாரமளித்தலை ஆதரிப்பதற்காக அதிக நிதி உதவியையும் இலக்கு சார்ந்த முயற்சிகளையும் வழங்குகிறது.

பொதுப் பிரிவினருக்கு 40% நிதியுதவி வழங்கப்படும் நிலையில், பயனாளிகளை மையமாகக் கொண்ட செயல்பாடுகளுக்குப் பெண் பயனாளிகள் 60% வரை அரசு நிதியுதவி பெறத் தகுதியுடையவர்கள் ஆவர். இது தனிநபர் மற்றும் குழுச் செயல்பாடுகள் இரண்டிற்கும் பொருந்தும் என்பதால், பெண்கள் மீன்வளம் சார்ந்த தொழில்களுக்கான நிதியைப் பெறுவது எளிதாகிறது.

மாநிலங்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு அளித்த பதிலில், மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் திரு. ராஜீவ் ரஞ்சன் சிங் என்ற லாலன் சிங் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2291662&reg=3&lang=1   

*

TV/PKV/SE


(रिलीज़ आईडी: 2292110) आगंतुक पटल : 8
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Bengali , Telugu