பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

மதிப்பு, நம்பிக்கை, திறன்மிக்க தலைமைத்துவம் ஆகியவற்றிற்கு உயர்ந்த குணநலனே அடிப்படை என்பதை எடுத்துரைக்கும் சமஸ்கிருத சுபாஷிதத்தை பிரதமர் பகிர்ந்துள்ளார்

प्रविष्टि तिथि: 27 JUL 2026 7:43AM by PIB Chennai

உயர்ந்த குணநலனுடைய ஒருவர் சமூகத்தில் எவ்வாறு மதிக்கப்படுகிறார் என்றும், அனைத்து பொறுப்புகளுக்கும் தகுதியானவராக கருதப்படுகிறார் என்பதை விளக்கக்கூடிய சமஸ்கிருத சுபாஷிதத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.

இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:

உயர்ந்த குணநலனுடைய ஒருவர் சமூகத்தில் மதிப்பையும், நற்பண்புகள் உடையவர்களுடைய நன்மதிப்பையும் பெறுகிறார். நேர்மை, பணிவு, ஒழுக்கம் ஆகியவற்றின் மூலம் அவர் எந்தப் பொறுப்பையும் ஏற்க தகுதியுடையவர் என்றும் கருதப்படுகிறார். அவர்களுடைய ஆளுமை பாராட்டுக்குரியதாகவும், ஊக்கமளிப்பதாகவும், மற்றவர்கள் கடைபிடிக்கத் தகுந்ததாகவும் அமைகிறது. உண்மையில் நீடித்த வெற்றி, திறன்மிக்க தலைமைத்துவம், உறுதியான நம்பிக்கை ஆகியவற்றிற்கு உயர்ந்த குணநலனே உண்மையான அடித்தளமாகும்.

***

Release ID: 2289745

TV/IR/LDN/KR


(रिलीज़ आईडी: 2289792) आगंतुक पटल : 11
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Assamese , Punjabi , Gujarati , Kannada , Malayalam