பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

எந்தவொரு சவாலையும் எதிர்கொள்ள இந்தியப் பாதுகாப்புப் படைகள் தயார் நிலையில் உள்ளன: பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங்

प्रविष्टि तिथि: 25 JUL 2026 9:10PM by PIB Chennai

"எதிரியின் நோக்கங்கள் மாறாமல் இருப்பதுடன், மறைமுகப் போர்கள் மற்றும் ஊடுருவல் போன்ற தீய உத்திகளை அவர்கள் தொடர்ந்து கையாண்டு வரும் நிலையிலும், எந்தவொரு சவாலையும் எதிர்கொள்ள இந்தியப் பாதுகாப்புப் படைகள் தயார் நிலையில் உள்ளன," என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். 27-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு, ஜூலை 25, 2026 அன்று டிராஸ் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் இவ்வாறு தெரிவித்தார். 1999-ஆம் ஆண்டு நடைபெற்ற கார்கில் போரில் இந்தியாவின் வெற்றியை உறுதி செய்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்திய அமைச்சர், மிகக் கடினமான சூழல்களிலும் அவர்கள் வெளிப்படுத்திய துணிச்சல், மன உறுதி மற்றும் தேசப்பற்று ஆகியவை ராணுவத்திற்கும் நாட்டிற்கும் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருவதாகக் கூறினார்.

பாதுகாப்புப் படைகள் மீது நம்பிக்கை தெரிவித்த அமைச்சர், நாட்டின் துணிச்சல்மிக்க படைவீரர்களின் தேசபக்தியும் உறுதியும் தளராமல் இருக்கும் வரை, இந்தியாவின் மீது தீய கண்ணோட்டத்தைச் செலுத்த யாருக்கும் தைரியம் வராது என்று குறிப்பிட்டார். அவர்களின் துணிச்சல்தான்ஒவ்வொரு குடிமகனும் அச்சமின்றித் தங்கள் கனவுகளைத் தொடரவும் அவற்றை நனவாக்கவும் உதவுகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

ராணுவத்தினரின் நலனைக் காப்பதில் பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான அரசின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்திய அவர், ராணுவத்திற்கு உலகத்தரம் வாய்ந்த ஆயுதங்கள் மற்றும் பயிற்சிகள் கிடைப்பதை உறுதிசெய்யும் வகையில், பாதுகாப்புத் துறையை நவீனமயமாக்குவதில் தொடர்ந்து முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார். நவீன தொழில்நுட்பங்களை ஏற்றுக்கொண்டதற்காக முப்படைகளையும் பாராட்டிய திரு ராஜ்நாத் சிங், அவர்களின் வீரமும் அர்ப்பணிப்பும் சார்ந்த நிகழ்வுகள், தேசிய அளவில் மட்டுமல்லாமல் உலக அளவிலும் அங்கீகரிக்கப்படுகின்றன என்று தெரிவித்தார். "இந்த நூற்றாண்டு நமக்கானது; எதிர்காலம் நமக்கானது. தன்னிறைவை நோக்கி நாம் அடைந்துள்ள முன்னேற்றத்தைக் கருத்தில் கொள்ளும்போது, வருங்காலத்தில் நமது முப்படைகள், உலகின் மிகச்சிறந்த படைகளாகத் திகழும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்," என்று அவர் கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2289479&reg=3&lang=1

***

TV/RB/RJ


(रिलीज़ आईडी: 2289609) आगंतुक पटल : 8
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Malayalam