வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

உத்தராகண்டில் இருந்து ஈராக்கிற்கு முதன்முறையாக 24 மெட்ரிக் டன் உறைபடுத்தப்பட்ட உருளைக்கிழங்கு வறுவல் ஏற்றுமதி செய்யப்பட்டது

प्रविष्टि तिथि: 20 JUL 2026 1:07PM by PIB Chennai

உத்தராகண்ட் மாநிலம் உதம்சிங் நகர் மாவட்டத்தின் காசிபூரில் இருந்து ஈராக்கிற்கு முதன்முறையாக 24 மெட்ரிக் டன் உறைபடுத்தப்பட்ட உருளைக்கிழங்கு வறுவல் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் வேளாண், பதனப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் இதற்கு ஏற்பாடு செய்துள்ளது. விருண் குளோபல் டிரேட் தனியார் நிறுவனம் சார்பில் இந்த ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இது உத்தராகண்ட்டில் இருந்து மதிப்பு கூட்டப்பட்ட வேளாண் பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கு ஊக்குவிப்பதில் முக்கிய நடவடிக்கையாக கருதப்படுகிறது.

இப்பொருட்களின் தரம் சர்வதேச சந்தைகளுக்கு மீண்டும் ஏற்றுமதி செய்வதற்கும், நீண்டகால வர்த்தக உறவைப் பராமரிப்பதற்கும் உதவும் என்றும், இது நிறுவனத்திற்கும் பிராந்தியத்திற்கும் நீடித்த ஏற்றுமதி வாய்ப்புகளை அளிக்கும் என்றும்  ஏற்றுமதியாளர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

***

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2286498&reg=3&lang=1

SS/IR/LDN/KR


(रिलीज़ आईडी: 2286536) आगंतुक पटल : 40
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Punjabi , Telugu