PIB Backgrounder
azadi ka amrit mahotsav

வேளாண் இயந்திரமயமாக்கலுக்கான துணை இயக்கம்: இயந்திரங்கள் மூலம் உற்பத்தித் திறனை அதிகரித்தல்

प्रविष्टि तिथि: 09 JUL 2026 11:28AM by PIB Chennai

நாட்டில் வேளாண் உற்பத்தித் திறனை அதிகரிக்கவும்விவசாயப் பணிகளை எளிதாக்கவும் தேசிய அளவில் 'வேளாண் இயந்திரமயமாக்கலுக்கான துணை இயக்கம் (ஸ்மேம்)சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறதுதேசிய வேளாண் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 2014-15 நிதியாண்டில் மத்திய அரசு நிதியுதவியுடன் தொடங்கப்பட்ட இந்தத் திட்டம்குறிப்பாகச் சிறு விவசாயிகள்பெண் விவசாயிகள்பின்தங்கிய சமூகத்தினருக்கு நவீன வேளாண் கருவிகள் கிடைப்பதை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளதுஇத்திட்டம் தொடங்கப்பட்டது முதல் இதுவரை மத்திய அரசின் நிதியுதவியாக 9,404.47 கோடி ரூபாய் வழங்கப்பட்டுநாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு 21.61 லட்சம் வேளாண் இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன.

பாரம்பரிய விவசாய முறைகளில் மனித உழைப்பு, கால்நடைகளின் மீதான சார்பைத் தவிர்த்து, விதைப்பு முதல் அறுவடை வரையிலான பணிகளை உரிய காலத்தில் குறைந்த செலவில் முடிக்க பண்ணை இயந்திரமயமாக்கல் மிக அவசியமாகிறது. இதற்காக நாடு முழுவதும் 27,554 இயந்திரங்கள் வாடகை மையங்கள், 646 அதிநவீன உற்பத்தித் திறன் மையங்கள், 25,608 பண்ணை இயந்திர வங்கிகள் ஆகியன நிறுவப்பட்டுள்ளன. சிறிய அளவில் நிலம் வைத்திருப்போர், அதிக மூலதனச் செலவுகளை எதிர்கொள்ளும் விவசாயிகள் ஆகியோருக்கு இந்த வாடகை மையங்கள் மூலம் குறைந்த விலையில் இயந்திரங்கள் வாடகைக்கு வழங்கப்படுகின்றன. இத்திட்டத்தின் கீழ் பொதுப் பிரிவைச் சேர்ந்த பயனாளிகளுக்கு 40 சதவீதமும், பட்டியலினத்தவர்கள், பழங்குடியினருக்கும், வடகிழக்கு மாநிலத்தைச் சேர்ந்த விவசாயிகளுக்கும் 50 சதவீதம் மானியமும் வழங்கப்படுகிறது. மேலும், பெண் விவசாயிகளின் பங்களிப்பை அதிகரிக்க ஒட்டுமொத்த நிதியில் 30 சதவீதம் அவர்களுக்கு மட்டும் பிரத்தியேகமாக ஒதுக்கப்படுகிறது.

விவசாயத்தில் நவீனப் புத்தாக்கத் தொழில்நுட்பங்களைப் புகுத்தும் நோக்கில் 52.50 கோடி ரூபாய் நிதி ஆதாரத்துடன் ட்ரோன் தொழில்நுட்பப் பயன்பாடு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில், மாநிலங்களில் உள்ள வேளாண் பல்கலைக்கழகங்களுடனும் வேளாண் அறிவியல் மையங்களுடனும் இணைந்து, நாடு முழுவதும் 40,918 ஹெக்டேர் பரப்பளவில் 40,928 ட்ரோன் செயல்முறை விளக்கங்களை நடத்தியுள்ளது. இதன் மூலம் பயிர்களுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள், உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகளைத் துல்லியமாகத் தெளிக்கும் நவீன நடைமுறைகள் விவசாயிகளுக்குக் கற்றுத்தரப்படுகின்றன. தகுதியான ஆராய்ச்சி நிறுவனங்களுக்கு ட்ரோன்களை வாங்க 100 சதவீத நிதியுதவியும், விவசாய உற்பத்தியாளர் அமைப்புகளுக்கு 75 சதவீதம் வரை மானியமும் வழங்கப்படுகிறது.

வேளாண்துறையில் உள்ளடக்கிய வளர்ச்சியை உறுதி செய்வதில், வேளாண் இயந்திரமயமாக்கலுக்கான துணை இயக்கம் ஒரு முக்கியத் திட்டமாக உருவெடுத்துள்ளது. சிறு, குறு விவசாயிகள், பெண் விவசாயிகள், பட்டியல் இனத்தவர் பழங்குடியின சமூகங்கள், பின்தங்கிய பகுதிகளுக்கு முன்னுரிமை அளித்து, மானியங்கள், வாடகை சேவை மையங்கள், குறிப்பிட்ட பிராந்தியங்களுக்கான ஆதரவு ஆகியவற்றின் மூலம் வேளாண் இயந்திரமயமாக்கலில் உள்ள சிக்கல்களைக் களைய இத்திட்டம் உதவுகிறது. பயிற்சிகள், செயல்விளக்கங்கள், அறுவடைக்குப் பிந்தைய மேலாண்மை, வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் (ட்ரோன்கள்) ஆகியவற்றிற்கு அளிக்கப்படும் முக்கியத்துவம், விவசாயத்தை நவீனமயமாக்குவதற்கான ஒரு தொலைநோக்கு அணுகுமுறையைப் பிரதிபலிக்கிறது.

இத்தகைய விரிவான நடவடிக்கைகள் மூலம் தற்சார்பு வேளாண் பொருளாதாரத்தை உருவாக்குவதில் வேளாண் இயந்திரமயமாக்கலுக்கான துணை இயக்கம் மிக முக்கியப் பங்காற்றி வருகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2282697&reg=3&lang=1

***

SS/PD/SH


(रिलीज़ आईडी: 2283000) आगंतुक पटल : 18
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Bengali , Bengali-TR , Assamese , Gujarati