சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
தேசிய ஆம்புலன்ஸ் சேவைகளுக்கான செயல்பாட்டு வழிகாட்டுதல்களை மத்திய அமைச்சர் திரு ஜெ பி நட்டா வெளியிட்டார்
प्रविष्टि तिथि:
29 JUN 2026 6:41PM by PIB Chennai
இந்தியாவின் அவசரக்கால மருத்துவக் கட்டமைப்பு மற்றும் மருத்துவமனைக்கு முந்தைய சிகிச்சை முறைகளை வலுப்படுத்தும் நோக்கில், மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் திரு ஜெ பி நட்டா இன்று 'தேசிய ஆம்புலன்ஸ் சேவைகள் 2026' க்கான செயல்பாட்டு வழிகாட்டுதல்களை வெளியிட்டார்.
முதன்முறையாக உருவாக்கப்பட்டுள்ள இந்த விரிவான தேசியக் கட்டமைப்பு, அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஆம்புலன்ஸ் சேவைகளைத் திட்டமிடுதல், இயக்குதல், கண்காணிப்பதற்கான தரப்படுத்தப்பட்ட முறைகளை வழங்குகிறது.
இந்த வழிகாட்டுதல்களின்படி, அனைத்து ஆம்புலன்ஸ்களும் உரிய பாதுகாப்பு, தரத்தை உறுதி செய்யும் வகையில் நிர்ணயிக்கப்பட்ட தரநிலைகளுக்கு இணங்க இருக்க வேண்டும். அவசரக்கால உதவிகளை விரைவுபடுத்த, புவியியல் சார் தகவல் அமைப்புகளைப் பயன்படுத்தி அருகில் உள்ள மருத்துவமனைகளைத் துல்லியமாகக் கண்டறிதல், நிகழ்நேரக் கண்காணிப்பு மற்றும் டிஜிட்டல் அழைப்பு மேலாண்மை முறைகள் அறிமுகப்படுத்தப்படுகின்றன.
மேலும், இந்தச் சேவைகளை '112' என்ற ஒற்றை அவசரக்கால எண்ணுடன் ஒருங்கிணைப்பதன் மூலம், நாடு முழுவதும் தடையற்ற மருத்துவ உதவி கிடைப்பது உறுதி செய்யப்படுகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2279073®=3&lang=1
***
SS/VK/PD
(रिलीज़ आईडी: 2279748)
आगंतुक पटल : 8