பிரதமர் அலுவலகம்
கோயம்புத்தூரில் நிகழ்ந்த விபத்து குறித்து பிரதமர் வருத்தம் தெரிவித்துள்ளார்.
प्रविष्टि तिथि:
17 APR 2026 9:22PM by PIB Chennai
தமிழ்நாட்டின் கோயம்புத்தூரில் நிகழ்ந்த விபத்து குறித்து பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.
இந்தச் சம்பவம் குறித்துக் கேள்விப்பட்டுத் தாம் மிகுந்த வருத்தம் அடைந்ததாகவும், இதில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்குத் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதாகவும் திரு மோடி கூறினார். மேலும், விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும் அவர் பிரார்த்தனை செய்தார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பதிவிட்டதாவது:
“தமிழ்நாட்டின் கோயம்புத்தூரில் நிகழ்ந்த விபத்தை அறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். இந்த விபத்தில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்: பிரதமர் @narendramodi”
***
(Release ID: 2253168)
SS/RB/KR
(रिलीज़ आईडी: 2278837)
आगंतुक पटल : 14
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam