பிரதமர் அலுவலகம்
மனஉறுதி, சுயகட்டுப்பாடு, ஞானம் ஆகியவற்றின் நற்பண்புகளை எடுத்துரைக்கும் சமஸ்கிரு சுபாஷிதத்தை பிரதமர் பகிர்ந்துள்ளார்
இடுகை இடப்பட்ட நாள்:
02 JUN 2026 8:30AM by PIB Chennai
மனஉறுதியும் சுயகட்டுப்பாடும் கடினமான பாதைகளைக் கூட எளிமையாக்கும் சக்திகள் என்று குறிப்பிடும் சமஸ்கிரு சுபாஷிதத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று பகிர்ந்துள்ளார். தற்போது நமது இளைஞர்கள் இந்த மனஉறுதியுடன் நாட்டைக் கட்டமைக்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டுள்ளதாக திரு மோடி குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது:
“ஒரு இலக்கை ஆழ்ந்து சிந்தித்து உறுதியான தீர்மானத்துடன் தொடங்கி, அதை விடாமல் நிறைவு செய்பவர், நேரத்தை அறிவுப்பூர்வமாக பயன்படுத்துபவர், தமது புலன்களை முழுமையாக கட்டுப்படுத்துபவரே உண்மையான ஞானியாவார்.”
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2267754®=3&lang=1
***
SS/IR/KPG/KR
(வெளியீட்டு அடையாள எண்: 2267890)
வருகையாளர் எண்ணிக்கை : 14
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam