பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

இந்தியாவின் எதிர்கால எஃகு புரட்சிக்கு கரிமவாயு சேகரிப்பு எவ்வாறு வலுசேர்க்க முடியும் என்பது குறித்த கட்டுரையைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்

இடுகை இடப்பட்ட நாள்: 11 FEB 2026 1:46PM by PIB Chennai

இந்தியாவின் எதிர்கால எஃகு புரட்சிக்கு கரிமவாயு சேகரிப்பு எவ்வாறு வலுசேர்க்க முடியும் என்பது குறித்து மத்திய அமைச்சர் திரு எச் டி குமாரசாமி எழுதிய கட்டுரையைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார். நிகர பூஜ்ஜிய 2070 உறுதிப்பாடு, உத்திசார்ந்த முதலீடுகள், ஹைட்ரஜன் முன்முயற்சிகள், உலகளாவிய போட்டித்தன்மை, வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கான பாதை ஆகியவற்றை நோக்கிய முயற்சிகள் நமக்கு எவ்வாறு வழிகாட்டுகின்றன என்பது பற்றி மத்திய அமைச்சர் திரு எச் டி குமாரசாமி கட்டுரை எழுதியிருப்பதாக திரு மோடி கூறியுள்ளார்.

மத்திய அமைச்சர் திரு எச் டி குமாரசாமிக்கு பதிலளித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் திரு மோடி பதிவிட்டிருப்பதாவது:

“இந்தியாவின் அடுத்த எஃகு புரட்சிக்கு கரிமவாயு சேகரிப்பு வலுசேர்க்கும். நிகர பூஜ்ஜிய 2070 உறுதிப்பாடு, உத்திசார்ந்த முதலீடுகள், ஹைட்ரஜன் முன்முயற்சிகள், உலகளாவிய போட்டித்தன்மை, வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கான பாதை ஆகியவற்றை நோக்கிய முயற்சிகள் நமக்கு எவ்வாறு வழிகாட்டுகின்றன என்பது பற்றி மத்திய அமைச்சர் திரு எச் டி குமாரசாமி கட்டுரை எழுதியுள்ளார்.

கூடுதல் கருத்துகளுக்கு இந்தக் கட்டுரையைப் படியுங்கள்…”

***

(Release ID: 2226286)

TV/SMB/RJ/KR

 


(வெளியீட்டு அடையாள எண்: 2242571) வருகையாளர் எண்ணிக்கை : 17