ரெயில்வே அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்த நிதியாண்டில் இதுவரை இந்திய ரயில்வேயின் 24 கோட்டங்களில் 90% க்கும் அதிகமாக நேரம் தவறாமை கடைப்பிடிக்கப்பட்டுள்ளது 19 கோட்டங்களில் 80-90% சரியான நேரம் பின்பற்றப்பட்டுள்ளது

இடுகை இடப்பட்ட நாள்: 13 MAR 2026 5:21PM by PIB Chennai

ரயில் சேவைகளின் நேரம் தவறாமை முனையத்தை சென்றடைவதன்  அடிப்படையில் அளவிடப்படுகிறது. ரயிலின் திட்டமிடப்பட்ட வருகை குறிப்பிட்ட நேர வரம்பிற்குள் இலக்கு நிலையத்திற்கு வரும் ரயில்களின் சதவீதத்தின் அடிப்படையில் வெளிப்படுத்தப்படுகிறது.

இந்திய ரயில்வேயில் நேரம் தவறாமைக்கு  அதிக முன்னுரிமை அளிக்கப்படுகிறது. ரயில்களைச் சரியான நேரத்தில் இயக்க இந்திய ரயில்வே அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்கிறது. ரயில்களின் நேரமின்மை குறித்த வழக்கமான, தொடர்ச்சியான மற்றும் நிகழ்நேர கண்காணிப்பை உறுதி செய்வதற்காக, தொழில்நுட்பக் கருவிகள் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.

மூடுபனி மற்றும் மோசமான தெரிவு நிலைமைகளின் போது ரயில் இயக்கமானது  இன்றியமையாத அங்கமாகும், மேலும் இது ஏற்கனவே லோகோ பைலட்டுகள்  மற்றும் உதவி லோகோ பைலட்டுகளுக்கான  பரிந்துரைக்கப்பட்ட பயிற்சி பாடத்திட்டத்தின் போக்குவரத்து தொகுதி மற்றும் தொழில்நுட்ப தொகுதியில் சேர்க்கப்பட்டுள்ளது.

 ரயில்வே, தகவல் ஒலிபரப்பு, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ், மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் இந்தத் தகவலை தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2239700&reg=3&lang=1

****

TV/PKV/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2239931) வருகையாளர் எண்ணிக்கை : 16
இந்த வெளியீட்டை படிக்க: English , हिन्दी , Gujarati , Kannada