பிரதமர் அலுவலகம்
நெட்வொர்க் 18 ரைசிங் பாரத் உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்
இடுகை இடப்பட்ட நாள்:
27 FEB 2026 11:06PM by PIB Chennai
நெட்வொர்க் 18 நடத்திய ரைசிங் பாரத் உச்சி மாநாட்டில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று உரையாற்றினார். கடந்த 11 ஆண்டுகளில் இந்தியாவின் பயணம் குறித்து எடுத்துரைத்த பிரதமர், 2047-ம் ஆண்டிற்குள் வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான தேசிய அளவிலான சாத்தியக் கூறுகள், பொருளாதார தற்சார்பு மற்றும் வழிவகைகளை மீட்டெடுப்பது குறித்து விரிவாக உரையாற்றினார்.
நாம் நாடும் தெய்வீகம் நமக்குள்ளேயே இருப்பதாக நமது வேதங்கள் குறிப்பிடுகின்றன என்று பிரதமர் கூறினார். நமக்குள் இருக்கும் சாத்தியக்கூறுகளை நாம் அவசியம் அங்கீகரிக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார். கடந்த 11 ஆண்டுகளில் இந்தியா பெரும் வலிமையுடன் அங்கீகரித்து அதை அதிகாரம் அளிப்பதற்கு தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக கூறினார்.
சாத்தியக்கூறுகள் என்பது நாட்டில் உடனடியாக ஏற்படவில்லை என்று குறிப்பிட்ட பிரதமர், இது தலைமுறை தலைமுறையாக கட்டமைக்கப்பட்டது என்றும் தெரிவித்தார்.
நாடு உற்பத்தி, தயாரிப்பு தரத்தை மேம்படுத்துதல், வலுவான அடித்தளத்தை உருவாக்க பொருளாதாரக் கொள்கையை வலுப்படுத்துதல் ஆகியவற்றில் மீண்டும் கவனம் செலுத்தி வருவதாக அவர் குறிப்பிட்டார். “வங்கி அமைப்பை வலுப்படுத்துவதன் மூலமும், இரட்டை இலக்க பணவீக்கத்தை வெற்றிகரமாகக் கட்டுப்படுத்துவதன் மூலமும், இந்த அரசு இந்தியாவை உலகின் வளர்ச்சி இயந்திரமாக திறம்பட மாற்றியுள்ளதாக தெரிவித்தார்.
மிண்ணணு பொது உள்கட்டமைப்பில் இந்தியாவின் தலைமைத்துவத்தைப் பற்றி பிரதமர் மோடி குறிப்பிட்டார். ஜன் தன், ஆதார், மொபைல் ஆகிய மூன்று அம்சங்கள் குறித்து மற்ற நாடுகளின் தலைவர்கள் அடிக்கடி கேட்பதில் ஆர்வமாக உள்ளனர் என்று கூறினார். நேரடி பணப் பரிமாற்றத்தின் வெற்றி குறித்து அவர் சுட்டிக்காட்டினார்.
இதன் மூலம் 24 டிரில்லியன் ரூபாய் எந்த இடையூறும் இல்லாமல் பயனாளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். ரயில்வே அமைப்பு உலகின் மூன்றாவது பெரிய மெட்ரோ கட்டமைப்பாக மாறியுள்ளது என்றும் அவர் எடுத்துரைத்தார்.
செயற்கை நுண்ணறிவு குறித்து பேசிய பிரதமர், முந்தைய தொழில்துறை புரட்சிகளில், இந்தியாவும், உலகளாவிய வளரும் நாடுகளும் வெறும் பின்தொடர்பவர்களாகவே இருந்தன என்று கூறினார். ஆனால் செயற்கை நுண்ணறிவு சகாப்தத்தில், இந்தியா முக்கிய பங்கு வகிப்பதாக தெரிவித்தார். தற்போது நமக்கு சுயமாக ஏஐ ஸ்டார்ட்அப் அமைப்பு உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். 100-க்கும் மேற்பட்ட நாடுகள் கலந்து கொண்ட ஏஐ உச்சி மாநாடு பெருமைக்குரிய தருணம் என்று திரு மோடி மேலும் கூறினார்.
எதிர்கால சந்ததியினருக்கு தற்போது சுயசார்பில் முதலீடு செய்வது அவசியம் என்று பிரதமர் வலியுறுத்தினார். தற்போது, நாம் ஒரு செமி கண்டக்டர் சூழல் அமைப்பை உருவாக்கி வருகிறோம் என்றும், பசுமை ஹைட்ரஜன், சூரிய சக்தி மற்றும் எத்தனால் கலவை, பாதுகாப்பு உற்பத்தியில் முதலீடு, மொபைல் உற்பத்தி, ட்ரோன்கள் தொழில்நுட்பம், எதிர்வரும் பல தசாப்தங்களுக்கு பொருளாதார பாதுகாப்பை உறுதி செய்வதற்கான முக்கியமான கனிம உள்கட்டமைப்பு ஆகியவற்றிற்கு முன்னுரிமை அளிக்கிறோம் என்றும் திரு மோடி எடுத்துரைத்தார்.
***
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2233809®=3&lang=2
TV/IR/LDN/KR
(வெளியீட்டு அடையாள எண்: 2234535)
வருகையாளர் எண்ணிக்கை : 5
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Bengali
,
Bengali-TR
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam