மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்
azadi ka amrit mahotsav

தேசிய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனம் நடத்திய வேலைவாய்ப்புத் திருவிழா 2026

இடுகை இடப்பட்ட நாள்: 21 FEB 2026 6:44PM by PIB Chennai

மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் உள்ள ஒரு தன்னாட்சி அறிவியல் சங்கமான தேசிய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனம் (என்ஐஇஎல்ஐடி), பிப்ரவரி 21, 2026 அன்று  தில்லியின் இளைஞர் வேலைவாய்ப்புத் திருவிழாவை ஏற்பாடு செய்தது. இந்த நிறுவனத்தின் முன்னாள் மாணவர்கள் மற்றும் தற்போதைய மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு வாய்ப்புகளை எளிதாக்கும் பொருட்டு, இந்த வேலைவாய்ப்புத் திருவிழா புதுதில்லியின் ஜனக்புரியில் உள்ள பங்கா சாலையில் அமைந்துள்ள நிறுவனத்தின் அலுவலகத்தில் நடைபெற்றது. 15 நிறுவனங்கள் தங்களது நிறுவனங்களில் உள்ள 1000-க்கும் மேற்பட்ட காலியிடங்களுக்கு விண்ணப்பதாரர்களைத் தேர்ந்தெடுத்தன. இந்த வேலைவாய்ப்புத் திருவிழாவிற்காக 750-க்கும் மேற்பட்ட விண்ணப்பதாரர்கள் பதிவு செய்திருந்தனர்.

பணியாளர் பொது இயக்குநரகத்தின் துணை பிராந்திய வேலைவாய்ப்பு அதிகாரியான திரு. தல்லூரு சுதீர், சிறப்பு விருந்தினராக இந்நிகழ்விற்கு வருகை தந்தார். அவரை என்ஐஇஎல்ஐடி தில்லியின் பொறுப்பு இயக்குநர் திருமதி ஷீதள் சோப்ரா வரவேற்றார். அவர்  விளக்கேற்றி நிகழ்வைத் தொடங்கி வைத்து, பின்னர் பங்கேற்பாளர்களை உரையாற்றினார்.

தனது தொடக்க உரையில், தில்லியில் வேலைவாய்ப்புக் கண்காட்சியை வெற்றிகரமாக ஏற்பாடு செய்த என்ஐஇஎல்ஐடி தில்லி மையத்தின் தொடர்ச்சியான முயற்சிகளை அவர் பாராட்டினார். மேலும், வேலைவாய்ப்புக் கண்காட்சியில் பங்கேற்ற நிறுவனங்களையும் அவர் பாராட்டினார்.

நிகழ்வின் போது, சித்தி இன்ஃபோநெட் இந்தியா பிரைவேட் லிமிடெட், பேடிஎம், ஜஸ்ட் டயல், பஜாஜ் கேபி போன்ற நிறுவனங்கள் இதில் பங்கேற்றன.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2231283&reg=3&lang=1

***

TV/PKV/RK


(வெளியீட்டு அடையாள எண்: 2231355) வருகையாளர் எண்ணிக்கை : 10
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी