பிரதமர் அலுவலகம்
மாணவர்களின் எல்லையில்லா ஆற்றலையும் தேர்வு குறித்த உரையாடல் உணர்வையும் எடுத்துரைக்கும் சமஸ்கிருத ஸ்லோகத்தைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்
இடுகை இடப்பட்ட நாள்:
09 FEB 2026 9:06AM by PIB Chennai
நமது மாணவர்கள் தங்களின் கனவுகளை நனவாக்க அசாதாரண திறனையும் முழுமையான ஆற்றலையும் பெற்றிருப்பதாகப் பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியுள்ளார். மாணவர்கள் தங்களின் தனிப்பட்ட வளர்ச்சிக்கும் வெற்றிக்கும் திறன்களையும் திறமைகளையும் எவ்வாறு அர்த்தமுள்ள வகையில் பயன்படுத்துவது என்பதில் அவர்களுக்கு வழிகாட்டியாக இருப்பது தேர்வு குறித்த உரையாடலின் மையப்பொருள் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிகழ்வு குறித்து சமஸ்கிருத ஸ்லோகம் ஒன்றைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்.
“विद्या वितर्को विज्ञानं स्मृतिस्तत्परता क्रिया। यस्यैते षड्गुणास्तस्य नासाध्यमतिवर्तते॥”
அறிவு, நடைமுறை, அறிவியல், நினைவாற்றல், துல்லியத்தன்மை, செயல்பாடு ஆகியவற்றை ஒருவர் கொண்டிருக்கும்போது அவர் எத்தகைய சவாலையும் முறியடிக்க முடியும், அவருக்கு சாத்தியமில்லாதவை எதுவும் இருக்காது என்பதை இந்த ஸ்லோகம் எடுத்துரைக்கிறது.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது;
“अद्भुत प्रतिभा के धनी हमारे विद्यार्थियों में अपने सपनों को सच करने की पूरी क्षमता है। 'परीक्षा पे चर्चा' का उद्देश्य भी यही है कि कैसे वे अपनी प्रतिभा और कौशल का सार्थक इस्तेमाल कर सकते हैं।
विद्या वितर्को विज्ञानं स्मृतिस्तत्परता क्रिया।
यस्यैते षड्गुणास्तस्य नासाध्यमतिवर्तते॥”
(Release ID: 2225244)
****
TV/SMB/LDN/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2225581)
வருகையாளர் எண்ணிக்கை : 16
இந்த வெளியீட்டை படிக்க:
Bengali
,
Bengali-TR
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam