பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஹால்வாரா விமான நிலையத்தில் முனையக் கட்டடத்தைப் பிரதமர் திறந்து வைத்தார்

இதுபஞ்சாப் மக்களுக்கு, குறிப்பாக லுதியானா மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளுக்குமிகவும் மகிழ்ச்சியான தருணம் என்று அவர் கூறியுள்ளார்

இடுகை இடப்பட்ட நாள்: 01 FEB 2026 7:18PM by PIB Chennai

ஹால்வாரா விமான நிலையத்தில் முனையக் கட்டடத்தைத் திறந்து வைத்த பிரதமர் திரு நரேந்திர மோடி, பஞ்சாப் மக்களுக்கு, குறிப்பாக லுதியானா மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளுக்கு மிகவும் மகிழ்ச்சியான தருணம் இது என்று  கூறியுள்ளார். வடக்கு இந்தியாவை துடிப்புமிக்க தொழில்துறை மற்றும் வணிகமையமாக லுதியானா விளங்குகிறது என்றும், இந்த நகருக்கு விமானப் போக்குவரத்து இணைப்பை மேம்படுத்த அரசு அயராது பாடுபட்டு வருகிறது என்றும், நவீன விமான நிலையத்திற்காக நடைபெறும் பணிகள் இதில் எதிரொலிக்கிறது என்றும் கூறியுள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது:     

“ஹால்வாரா விமான நிலையத்தில் முனையக் கட்டடம் திறக்கப்பட்டிருப்பது, பஞ்சாப் மக்களுக்கு, குறிப்பாக லுதியானா மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளுக்கு மிகவும் மகிழ்ச்சியான தருணமாகும். நாம் நன்கு அறிந்திருப்பது போல், வடக்கு இந்தியாவின் துடிப்புமிக்க தொழில்துறை மற்றும் வணிகமையமாக லுதியானா விளங்குகிறது. இந்த நகரம் அதன் ஆற்றல்மிக்க மக்களால் அறியப்பட்டதாகும். இந்த நகருக்கு விமானப் போக்குவரத்து இணைப்பை மேம்படுத்த எங்கள் அரசு அயராது பாடுபட்டு வருகிறது என்பதை, நவீன விமான நிலையத்திற்காக நடைபெறும் பணிகள் எதிரொலிக்கின்றன.”     

 

***

(Release ID: 2221811)

VJ/PKV/SMB/RJ/SE/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2221845) வருகையாளர் எண்ணிக்கை : 56