வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

வர்த்தகம் மற்றும் முதலீட்டுச் சட்ட மையம் மற்றும் குஜராத் தேசிய சட்டப் பல்கலைக்கழகம் சார்பாக காந்திநகரில் சட்டம் மற்றும் பொருளாதாரம் குறித்த 9வது சர்வதேச மாநாடு நடைபெற்றது

प्रविष्टि तिथि: 21 JAN 2026 6:04PM by PIB Chennai

வர்த்தகம் மற்றும் முதலீட்டுச் சட்ட மையம் (CTIL), குஜராத் தேசிய சட்டப் பல்கலைக்கழகத்துடன் (GNLU) இணைந்து, அதன் சட்டம் மற்றும் பொருளாதார மையம், சட்டம் மற்றும் இடைநிலை ஆய்வுகளில் அனுபவ மற்றும் பயன்பாட்டு ஆராய்ச்சி மையம் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆய்வுகள் மையம் மூலம், காந்திநகரில் உள்ள  சட்டப் பல்கலைக்கழகத்தில் சட்டம் மற்றும் பொருளாதாரம் (அனுபவ மற்றும் பயன்பாட்டு சட்டம் மற்றும் பொருளாதாரம் மற்றும் உள்ளடக்கிய பொதுக் கொள்கை) குறித்த 9வது சர்வதேச மாநாட்டை வெற்றிகரமாக நடத்தியது.

தொடக்க அமர்வில் இந்திய உச்சநீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி ஏ.கே. சிக்ரி மற்றும் இந்திய அட்டர்னி ஜெனரல் திரு ஆர். வெங்கட்ரமணி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர். நீதிபதி ஏ.கே. சிக்ரி தனது முக்கிய உரையில், நீதிபதிகள் சட்டத்தைப் பயன்படுத்துவது மட்டுமல்லாமல், சட்ட விளக்கங்களின் பொருளாதார விளைவுகளையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார். கொள்கை வகுப்பாளர்கள் சந்திக்கும் வளர்ந்து வரும் சவால்களை எதிர்கொள்ள புதிய நிறுவன ஏற்பாடுகள் மற்றும் அனுபவ மாதிரிகளின் அவசியத்தை திரு ஆர். வெங்கட்ரமணி எடுத்துரைத்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2216984&reg=3&lang=1       

---

TV/BR/RK


(रिलीज़ आईडी: 2217106) आगंतुक पटल : 7
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी