திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

செயற்கை நுண்ணறிவு தயார் நிலைக்கான திறன் மேம்பாடு சிறப்பு நிகழ்ச்சியை குடியரசுத் தலைவர் தொடங்கி வைக்கிறார்

प्रविष्टि तिथि: 30 DEC 2025 4:39PM by PIB Chennai

திறன் இந்தியா இயக்கத்தின் முன்முயற்சியாக செயற்கை நுண்ணறிவு தயார் நிலைக்கான திறன் மேம்பாடு என்ற சிறப்பு நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு பங்கேற்க உள்ளார். இந்நிகழ்ச்சி குடியரசுத் தலைவர் மாளிகை கலாச்சார மையத்தில் 2026, ஜனவரி 1 அன்று காலை 11 மணிக்கு நடைபெறவுள்ளது.

மந்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ள இந்நிகழ்ச்சிசெயற்கை நுண்ணறிவு சார்ந்த எதிர்காலத்திற்கான இந்தியாவின் பணிக்குழுவை தயார் செய்வதற்கான அரசின் தொடர் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது. மத்திய கல்வி அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான்மத்திய திறன் மேம்பாடுதொழில் முனைவு மற்றும் கல்வித்துறை இணையமைச்சர் திரு ஜெயந்த் சௌத்ரி ஆகியோர் முன்னிலையில் இந்நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. மாணவர்கள்நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோருக்கு செயற்கை நுண்ணறிவு சான்றிதழ்களை திருமதி திரௌபதி முர்மு வழங்குகிறார். எதிர்காலத்திற்கு தேவையான திறன் மேம்பாடு திட்டங்களில் இளைஞர்கள் அதிகளவில் பங்கேற்பதை ஊக்குவிக்கும் வகையில் "ஸ்கில் த நேஷன் சேலன்ஞ்" என்ற தேசிய விழிப்புணர்வு இயக்கத்தை அவர் தொடங்கி வைக்கிறார்.

இந்நிகழ்ச்சியில் “தொடக்க நிலையாளர்களுக்கான செயற்கை நுண்ணறிவு” என்ற சிறப்பு அமர்வை திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளது. கூகுள் நிறுவனத்துடன் ஒருங்கிணைந்து உலகளாவிய பிரபல செயற்கை நுண்ணறிவு நிபுணர்கள் தலைமையில் விரிவான உரையாடல் கற்றல் தொகுப்பு இடம்பெறவுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2209830&reg=3&lang=1 

***

TV/IR/RK/SE


(रिलीज़ आईडी: 2209959) आगंतुक पटल : 10
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Malayalam