பாதுகாப்பு அமைச்சகம்
'ஸ்பார்ஷ்' டிஜிட்டல் தளத்தில் 31.69 லட்சம் பாதுகாப்புத் துறை ஓய்வூதியதாரர்கள் இணைப்பு
प्रविष्टि तिथि:
15 DEC 2025 5:34PM by PIB Chennai
பாதுகாப்புத் துறை ஓய்வூதிய நிர்வாகத்திற்கான இந்தியாவின் மிகப்பெரிய டிஜிட்டல் தளமான 'ஸ்பார்ஷ்' , நவம்பர் 2025 நிலவரப்படி 31.69 லட்சம் ஓய்வூதியதாரர்களை இணைத்துள்ளது. இது 45,000-க்கும் மேற்பட்ட முகவர் நிறுவனங்களால் நிர்வகிக்கப்பட்ட பழைய அமைப்பை மாற்றி, ஒரு ஒருங்கிணைந்த, வெளிப்படையான டிஜிட்டல் அமைப்பை உருவாக்கியுள்ளது.
சாதனைகள்: பழைய அமைப்பிலிருந்து மாற்றப்பட்ட 6.43 லட்சம் முரண்பாடு வழக்குகளில், 94.3% (6.07 லட்சம்) தீர்க்கப்பட்டுள்ளன.
குறைகள் தீர்வு: ஆன்லைன் மூலம் குறைகளைக் களைய முடியும் என்பதால், குறைகளைத் தீர்ப்பதற்கான சராசரி நேரம் 56 நாட்களிலிருந்து 17 நாட்களாகக் குறைந்துள்ளது.
டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ் : டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ் 4.0 பிரச்சாரத்தில், பாதுகாப்பு ஓய்வூதியதாரர்களுக்கு 20.94 லட்சம் சான்றிதழ்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
நிதி விநியோகம்: 2024-25 நிதியாண்டில் ரூ. 1,57,681 கோடி ஓய்வூதியம் 'ஸ்பார்ஷ்' மூலம் வழங்கப்பட்டுள்ளது. ஒரே பதவிக்கு ஒரே ஓய்வூதியம் திட்டத்தின் கீழ், 20.17 லட்சம் பயனாளிகளுக்கு ரூ. 1,224.76 கோடி 15 நாட்களில் விநியோகிக்கப்பட்டது.
இந்தத் தளம், வீரர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் கண்ணியத்தையும், சரியான நேரத்தில் ஆதரவையும் உறுதி செய்கிறது.
மேலும்விவரங்களுக்குஇந்தஆங்கிலசெய்திக்குறிப்பைக்காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2204165®=3&lang=1
(வெளியீட்டுஅடையாள எண்: 2204165)
****
SS/VK/SH
(रिलीज़ आईडी: 2204363)
आगंतुक पटल : 11