பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

என்சிசி-யில் மாணவர் சேர்க்கை

இடுகை இடப்பட்ட நாள்: 05 DEC 2025 2:57PM by PIB Chennai

கடந்த ஐந்து ஆண்டுகளில் நாட்டில் தேசிய மாணவர் படையில் (என்சிசி) சேர்ந்த மொத்த மாணவர்களின் எண்ணிக்கை 15,58,199 ஆகும்.

கடந்த ஐந்து ஆண்டுகளில், ஜம்மு & காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களில் மொத்தம் நான்கு என்சிசி பிரிவுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

என்சிசி-யில் பெண்களின் பங்கேற்பை ஊக்குவிப்பதற்கும் பெண் மாணவர்களுக்கான உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கும் அரசு எடுத்த நடவடிக்கைகளில் பயிற்சி உள்கட்டமைப்பை மேம்படுத்துதல், பெண் மாணவர்களுக்கான சம பயிற்சி வாய்ப்புகளை உறுதி செய்வதற்கான பாடத்திட்டம் மற்றும் பயிற்சி தொகுதிகளை தரப்படுத்துதல், பெண் இணை அதிகாரிகள்  மற்றும் நிரந்தர அதிகாரிகளின் சேர்க்கையை அதிகரித்தல் மற்றும் வளாகத்தில்  பெண் அதிகாரிகள், பயிற்சி பெற்ற பெண் பயிற்றுவிப்பாளர்கள் மற்றும் பெண் மருத்துவ ஊழியர்கள் கட்டாயமாக இருப்பது ஆகியவை அடங்கும்.

 

ஆயுதப் படைகளில் என்சிசி மாணவர்களின் ஆட்சேர்ப்பு மற்றும் அவர்களின்  முன்னேற்றம் குறித்த விவரங்கள் மூன்று சேவைகளாலும் பராமரிக்கப்படுகின்றன.

 

மக்களவையில் இன்று  எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், பாதுகாப்புத் துறை இணையமைச்சர் திரு சஞ்சய் சேத் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2199342&reg=3&lang=1

 

SS/PKV/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2203330) வருகையாளர் எண்ணிக்கை : 24
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी