PIB Headquarters
azadi ka amrit mahotsav

புதிய தொழிலாளர் சட்டங்கள் பெண்களுக்கு அதிக பாதுகாப்பு, சமத்துவம் மற்றும் பணியிட நெகிழ்வுத்தன்மையுடன் அதிகாரம் அளிக்கின்றன

Posted On: 27 NOV 2025 1:23PM by PIB Chennai

இந்தியாவின் பணியாளர்களில் பெண்கள் ஒரு முக்கியமான மற்றும் வளர்ந்து வரும் பிரிவாக உள்ளனர். புதிய தொழிலாளர் சட்டங்கள்  அவர்களுக்கு மிகவும் உள்ளடக்கிய, பாதுகாப்பான மற்றும் செயல்படுத்தும் பணிச்சூழலை உருவாக்குவதற்கான ஒரு நடவடிக்கையாக உள்ளன.

சமத்துவம், மகப்பேறு சலுகைகள், பணியிட பாதுகாப்பு, முடிவெடுக்கும் அமைப்புகளில் பிரதிநிதித்துவம் ஆகியவற்றில் முற்போக்கான விதிகளுடன், இன்றைய பொருளாதாரத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்ய தொழிலாளர் விதிமுறைகளை இச்சட்டங்கள்  நவீனப்படுத்துகின்றன. இந்த சீர்திருத்தங்கள் பெண் தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாப்பது மட்டுமல்லாமல், சமமாக நடத்தப்படுவதை உறுதிசெய்வதன் மூலமும், அனைத்துத் துறைகளிலும் அவர்களின் பங்களிப்பை ஆதரிப்பதன் மூலமும் வாய்ப்புகளை விரிவுபடுத்துகின்றன. இந்த நடவடிக்கைகள்  பெண்களின் பொருளாதார அதிகாரமளிப்பை வலுப்படுத்துகின்றன.

சமூகப் பாதுகாப்பு சட்டத்தின்படி, மகப்பேறு சலுகைகளுக்குத் தகுதி பெற, ஒரு பெண் எதிர்பார்க்கப்படும் பிரசவத்திற்கு முந்தைய 12 மாதங்களில் குறைந்தது 80 நாட்கள் ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்திருக்க வேண்டும். தகுதியான பெண்கள் விடுப்பு காலத்திற்கு அவர்களின் சராசரி தினசரி ஊதியத்திற்கு சமமான மகப்பேறு சலுகையைப் பெறுகிறார்கள். மகப்பேறு விடுப்பின் அதிகபட்ச காலம் 26 வாரங்கள் ஆகும், இதில் 8 வாரங்கள் வரை எதிர்பார்க்கப்படும் பிரசவ தேதிக்கு முன்னதாக எடுத்துக்கொள்ளலாம்.

ஒரு பெண்ணுக்கு ஒதுக்கப்பட்ட வேலை அவள் வீட்டிலிருந்து வேலை செய்யக்கூடிய தன்மை கொண்டதாக இருந்தால், முதலாளியும் பெண்ணும் பரஸ்பரம் ஒப்புக் கொள்ளக்கூடிய காலத்திற்கு மகப்பேறு சலுகையைப் பெற்ற பிறகு, முதலாளி அவரை அனுமதிக்கலாம்.

புதிய தொழிலாளர் சட்டங்களின் கீழ் முற்போக்கான விதிகள் பாலின சமத்துவத்தைக் கொண்டுவருவதன் மூலம் அனைத்து நிறுவனங்களிலும் சமத்துவம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்கிறது. சம வேலைக்கு சம ஊதியம், மேம்படுத்தப்பட்ட மகப்பேறு சலுகைகள், குழந்தை பராமரிப்பு வசதி மற்றும் ஆட்சேர்ப்பில் பாகுபாடு காட்டாதது போன்ற விதிகள் மூலம், போதுமான பாதுகாப்பு நடவடிக்கைகளை இச்சட்டங்கள் ஊக்குவிக்கின்றன.

குறைதீர்க்கும் நடவடிக்கைகளில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பது அவர்களின் நலனைப் பாதுகாக்கும். ஒட்டுமொத்தமாக, இந்த சீர்திருத்தங்கள் பெண்களுக்கு மிகவும் உள்ளடக்கிய, பாதுகாப்பான மற்றும் அதிகாரமளிக்கும் பணிச்சூழலை உருவாக்கி, இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு முழுமையாகவும் நம்பிக்கையுடனும் பங்களிக்க உதவுகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2195247

***

AD/PKV/SH


(Release ID: 2195586) Visitor Counter : 5