தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சஞ்சார் சாத்தி அக்டோபரில் 50,000-க்கும் மேற்பட்ட தொலைபேசிகளை மீட்டெடுக்க உதவியுள்ளது

Posted On: 25 NOV 2025 1:41PM by PIB Chennai

மத்திய தொலைத்தொடர்புத் துறை, அதன் டிஜிட்டல் பாதுகாப்பு முயற்சியான சஞ்சார் சாத்தி மூலம் , இந்தியா முழுவதும்  50,000-க்கும் மேற்பட்ட தொலைந்து போன மற்றும் திருடப்பட்ட மொபைல் கைபேசிகளை அக்டோபர் மாதத்தில்  மீட்டெடுக்க உதவியுள்ளது என்று அறிவித்துள்ளது. இந்த சாதனை  குடிமக்களின் டிஜிட்டல் சொத்துக்களைப் பாதுகாப்பதற்கான அசைக்க முடியாத அர்ப்பணிப்பையும் தொழில்நுட்பம் சார்ந்த நிர்வாகத்தின் மீதான பொதுமக்களின் நம்பிக்கையையும் பிரதிபலிக்கிறது. நாடு தழுவிய ஒட்டுமொத்த மீட்பு 7 லட்சம் என்ற எண்ணிக்கையைத்  தாண்டியுள்ளது.

கர்நாடகா மற்றும் தெலுங்கானா ஆகியவை சிறந்த செயல்திறன் கொண்ட மாநிலங்களாக உருவெடுத்துள்ளன, ஒவ்வொன்றும் 1 லட்சம் மீட்டெடுப்புகளைக் கடந்துள்ளன; மகாராஷ்டிரா 80,000-க்கும் மேற்பட்ட மீட்டெடுப்புகளைக் கடந்துள்ளன. குறிப்பிடத்தக்க வகையில், ஜூன் முதல் அக்டோபர் 2025 வரை மாதாந்திர மீட்டெடுப்புகள் 47 சதவீதம் அதிகரித்துள்ளன. இது, இந்த அமைப்பின் வளர்ந்து வரும் செயல்திறன் மற்றும் வரம்பை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. இந்த அமைப்பின் உதவியுடன், நாடு முழுவதும் ஒவ்வொரு நிமிடமும் ஒன்றுக்கும் மேற்பட்ட கைபேசிகள் மீட்கப்படுகின்றன.

சஞ்சார் சாத்தியின் மேம்பட்ட தொழில்நுட்பம் தடுக்கப்பட்ட சாதனங்களை தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்கிறது. புகாரளிக்கப்பட்ட கைபேசியில் ஒரு சிம் கார்டு பொருத்தப்படும்போது, இந்த அமைப்பு பதிவுசெய்யப்பட்ட குடிமகனுக்கும் தொடர்புடைய காவல் நிலையத்திற்கும் எச்சரிக்கைகளைத் தூண்டுகிறது, இதனால் விரைவான மற்றும் திறமையான மீட்பு சாத்தியமாகிறது.

இந்த வெற்றி தடையற்ற ஒத்துழைப்பின் விளைவாகும். மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் உள்ள காவல்துறை பணியாளர்கள், தொலைத்தொடர்புத் துறையின் டிஜிட்டல் புலனாய்வுப் பிரிவு (டிஐயு) நெருக்கமான ஒருங்கிணைப்பில் பணியாற்றியுள்ளன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2194012

***

SS/PKV/SH


(Release ID: 2194311) Visitor Counter : 9