சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

செவிலியர் திறன்களை மேம்படுத்த ஆஸ்திரேலியாவின் எடித் கோவன் பல்கலைக்கழகத்துடன் வட்டமேசை உரையாடல்

Posted On: 17 NOV 2025 3:13PM by PIB Chennai

ஆஸ்திரேலியாவின் எடித் கோவன் பல்கலைக்கழகம்,  மகளிர் மருத்துவம் மற்றும் மகப்பேறியல் துறையில் சர்வதேச கல்விக்கான ஜான்ஸ் ஹாப்கின்ஸ் திட்டம் ஆகியவற்றுடன் இணைந்து, ‘இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவில் செவிலியர் பணியாளர்களை வலுப்படுத்துதல்: நீடித்த வளர்ச்சி இலக்குகளுடன் இணைந்த நெகிழ்வுத்தன்மை மற்றும் திறமையான செவிலியர் பணியாளர்களுக்கான கூட்டுப் பாதைகளை உருவாக்குதல்’ என்ற இரண்டு நாள் வட்டமேசையின் முதல் நாள் ஆலோசனையை  மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் இன்று வெற்றிகரமாகத் தொடங்கியது.

இந்த ஆலோசனை, நிலையான வளர்ச்சி இலக்குகளுடன் இணைந்த, நெகிழ்வுத்தன்மை கொண்ட, எதிர்காலத்திற்குத் தயாராக இருக்கும் செவிலியர்களை உருவாக்கக் கூட்டுப் பாதைகளை உருவாக்குவது, சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்து கொள்வது மற்றும் ஆழமான ஒத்துழைப்பை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டது.

இந்தக் கூட்டத்தில் முக்கிய உரையாற்றிய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத் துணைச் செயலாளர் (நர்சிங் & பல் மருத்துவம்) திருமதி அகன்க்ஷா ரஞ்சன், இந்தியாவில் செவிலியர் கொள்கையின் எதிர்கால திசையைப் பற்றி விவாதித்த மூன்று நாள் தேசிய உத்திசார் கூட்டத்திற்குப் பின், வட்டமேசை ஒரு சரியான தருணத்தில் நடைபெறுகிறது என்று குறிப்பிட்டார். "செவிலியர்கள் சுகாதாரப் பராமரிப்பின் முதுகெலும்பு" என்று அவர் கூறினார். மிகவும் உறுதியான மற்றும் திறன் சார்ந்த செவிலியர்களை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.

உலக அளவில் 2.9 மில்லியன் செவிலியர்கள் சேவை செய்யும் அதே வேளையில், பற்றாக்குறை 4.5 மில்லியனாக உள்ளது என்றும், இது குறிப்பிடத்தக்க உலகளாவிய தேவையை உருவாக்குகிறது என்று திருமதி ரஞ்சன் தெரிவித்தார். இந்தியா-ஆஸ்திரேலியா ஒத்துழைப்பு என்பது செவிலியர் கல்வித் தரங்களைக்  கூட்டாக முன்னேற்றுவதற்கும், பணியாளர் பாதைகளை விரிவுபடுத்துவதற்கும், நெறிமுறை இயக்கத்தை மேம்படுத்துவதற்கும் ஒரு மதிப்புமிக்க தளத்தை வழங்குகிறது என்பதை அவர் எடுத்துரைத்தார்.

இந்த நிகழ்வில் பேசிய ஆஸ்திரேலியாவின் எடித் கோவன் பல்கலைக்கழகத்தின் நிர்வாக டீன் பேராசிரியர் கரேன் ஸ்ட்ரிக்லேண்ட், செவிலியர் கல்வி மற்றும் நடைமுறையை முன்னேற்றுவதில் இரு நாடுகளின் கூட்டு முயற்சிகளைப் பாராட்டினார். வளர்ந்து வரும் சுகாதாரப் பாதுகாப்பு தேவைகளை வழிநடத்தவும், வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களை ஏற்றுக்கொள்ளவும் செவிலியர்களை தயார்படுத்துவதில் உலகளாவிய ஒத்துழைப்பு மிக முக்கியமானது என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2190778

****

AD/SMB/SH


(Release ID: 2190997) Visitor Counter : 7