பாதுகாப்பு அமைச்சகம்
கடற்படையின் கிழக்கு கட்டளை சார்பில் வருடாந்திர கடற்படை கல்வி சங்க மாநாடு விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது
Posted On:
16 NOV 2025 12:35PM by PIB Chennai
கிழக்கு கடற்படை கட்டளை சார்பில் வருடாந்திர கடற்படை கல்வி சங்க மாநாடு 2025 நவம்பர் 10 முதல் 13 வரை விசாகப்பட்டினத்தில் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. புதிய தேசிய கல்விக் கொள்கை 2020-ன் அட்டிப்படையில், கடற்படைப் பள்ளிகளின் செயல்பாடுகள் குறித்து முக்கிய கூட்டங்கள் இந்த மாநாட்டில் இடம்பெற்றன.
2025 நவம்பர் 12 அன்று நடைபெற்ற நிர்வாகக் குழுக் கூட்டத்திற்கு, கடற்படை கல்வி சங்கத்தின் தலைவரான வைஸ் அட்மிரல் பிரவீன் நாயர் தலைமை வகித்தார். இந்த நிகழ்வில் கடற்படை தலைமையகத்தைச் சேர்ந்த அதிகாரிகளும், நாடு முழுவதும் உள்ள கடற்படைப் பள்ளிகளின் நிர்வாகத் தலைவர்களும் பங்கேற்றனர்.
வைஸ் அட்மிரல் பிரவீன் நாயர் தமது சிறப்புரையில், கடற்படை வீரர்களின் குழந்தைகளுக்கு தடையற்ற கல்விச் சூழலை ஏற்படுத்தித் தர அனைத்து கடற்படைப் பள்ளிகளும் செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
மாணவர்களின் கல்வித் திறனை அங்கீகரிக்கும் விதமாக, இந்த மாநாட்டின்போது 2024-25 கல்வியாண்டிற்கான கடற்படை கல்வி சங்கத்தின் கல்வி விருதுகளையும் அவர் வழங்கினார்.
***
(Release ID: 2190483)
SS/PLM/RJ
(Release ID: 2190628)
Visitor Counter : 4