குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

ரோட்டரி தேஜஸ் - மாற்றத்தின் சிறகுகள் நிகழ்வை குடியரசு துணைத் தலைவர் தொடங்கி வைக்கிறார்

प्रविष्टि तिथि: 13 NOV 2025 3:19PM by PIB Chennai

குடியரசு துணைத் தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன், புது தில்லியின் யசோபூமியில்  2025 நவம்பர் 14 அன்று நடைபெறவுள்ள ரோட்டரி தேஜஸ் – மாற்றத்தின் சிறகுகள்  நிகழ்வில், முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்டு தொடங்கி வைக்கிறார்.

ரோட்டரி மண்டலங்கள் 4, 5, 6, மற்றும் 7-க்கான 2025 ஆம் ஆண்டுக்கான தேஜஸ் – ரோட்டரி மண்டல நிகழ்வு, புது தில்லியின் யசோபூமியில் 2025 நவம்பர் 14 முதல் 16 வரை நடைபெற உள்ளது. இந்த நிகழ்வில், 1,400-க்கும் மேற்பட்ட ரோட்டரி நிர்வாகிகள், உறுப்பினர்கள், கொள்கை வகுப்பவர்கள்,  முக்கியப் பிரமுகர்கள் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரோட்டரி என்பது உலகம் முழுவதும் 1.4 மில்லியனுக்கும் அதிகமான தொழில் வல்லுநர்கள் மற்றும் சமூகத் தலைவர்களைக் கொண்ட உலகளாவிய அமைப்பாகும். உலகின் மிகவும் நீடித்த மனிதநேய சவால்களை எதிர்கொள்வதற்கு இவர்கள் அர்ப்பணிப்புடன் செயல்படுகின்றனர். இந்தியாவில், ரோட்டரி அமைப்பானது 6,700-க்கும் மேற்பட்ட மன்றங்களில்  2,10,000-க்கும் அதிகமான உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. இவர்கள் சமூக மாற்றத்திற்கான சேவைத் திட்டங்களில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

***

SS/VK/SH


(रिलीज़ आईडी: 2189857) आगंतुक पटल : 24
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Malayalam