பாதுகாப்பு அமைச்சகம்
கடல்சார் தகவல் பகிர்வு பயிலரங்கின் கடல்சார் பாதுகாப்பு கருத்தரங்கு நிறைவடைந்தது
Posted On:
05 NOV 2025 5:34PM by PIB Chennai
கடல்சார் தகவல் பகிர்வு பயிலரங்கு 25-ன் ஒரு பகுதியாக நடத்தப்பட்ட கடல்சார் பாதுகாப்பு கருத்தரங்கு, 2025 நவம்பர் 04 அன்று நிறைவடைந்தது. "இந்தியப் பெருங்கடல் பிராந்தியம் முழுவதும் நிகழ்நேர ஒருங்கிணைப்பு மற்றும் தகவல் பகிர்வை மேம்படுத்துதல்" என்ற கருப்பொருளில் நடைபெற்று வரும் மூன்று நாள் பயிலரங்கு (நவம்பர் 3-ம் தேதி முதல் 5-ம் தேதி வரை) இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்திற்கான தகவல் இணைவு மையத்தால் நடத்தப்படுகிறது. மேலும் 30 நாடுகளைச் சேர்ந்த 57-க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்களை இந்த நிகழ்வு ஒன்றிணைத்துள்ளது.
இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் வளர்ந்து வரும் கடல்சார் சவால்களை எதிர்கொள்ள ஒத்துழைப்பு, இயங்குதன்மை மற்றும் நம்பிக்கை அடிப்படையிலான கூட்டாண்மைகளின் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டிய கடற்படைத் துணைத் தலைவர் வைஸ் அட்மிரல் தருண் சோப்தியின் தொடக்க உரையுடன் கருத்தரங்கு தொடங்கியது. இதைத் தொடர்ந்து, கப்பல் போக்குவரத்து இயக்குநரகத்தின் கூடுதல் தலைமை இயக்குநர் திரு சுஷில் மான்சிங் கோப்டே, இந்தியாவின் கடல்சார் முன்முயற்சிகள் மற்றும் கூட்டுறவு ஈடுபாடு மற்றும் ஒழுங்குமுறை சீரமைப்பு மூலம் பிராந்தியத்தின் கடல்சார் பாதுகாப்பு கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கான முயற்சிகளை எடுத்துரைத்தார்.
கருத்தரங்கின் இரண்டு நாட்களில், பிராந்திய பாதுகாப்பு இயக்கவியல் அம்சங்கள், தகவல் வலையமைப்புகளின் பங்கு, செயல்பாட்டு ஒருங்கிணைப்பு, கடல்சார் சட்டம், தொழில்துறை முன்னோக்குகள் மற்றும் நாடுகடந்த கடல்சார் குற்றங்கள் உள்ளிட்ட கடல்சார் பாதுகாப்பு சூழலை வடிவமைக்கும் பல்வேறு தலைப்புகளில் பங்கேற்பாளர்கள் கலந்துரையாடினர்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2186675
***
(Release ID: 2186675)
SS/BR/KR
(Release ID: 2186941)
Visitor Counter : 5