பாதுகாப்பு அமைச்சகம்
பாதுகாப்பு நிறுவனங்கள் முழுவதும் தூய்மை இயக்கங்களை ராணுவ விவகாரத்துறை நடத்துகிறது
प्रविष्टि तिथि:
22 OCT 2025 4:46PM by PIB Chennai
பாதுகாப்பு அமைச்சகத்தின் சிறப்பு பிரச்சாரம் 5.0, 2025 அக்டோபர் 2 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது நாடு முழுவதும் ஆயுதப்படைகள் மற்றும் அனைத்து பாதுகாப்பு நிறுவனங்களின் தீவிர பங்கேற்பை எடுத்துக்காட்டுகிறது. பிரச்சாரத்தின் முதல் இரண்டு வாரங்களில், மொத்தம் 1,39,484 கோப்புகள் மதிப்பாய்வு செய்யப்பட்டுள்ளன, 1,443 பிரச்சார தளங்கள் சுத்தம் செய்யப்பட்டுள்ளன மற்றும் 157 விதிகள் மதிப்பாய்வு செய்யப்பட்டு எளிமைப்படுத்தப்பட்டுள்ளன. இதுவரை, கழிவுகள் அகற்றல் மூலம் கிடைத்த வருவாய் ரூ. 10.89 கோடி ஆகும்.
2025 செப்டம்பர் கடைசி இரண்டு வாரங்களில் நடைபெற்ற தயாரிப்பு கட்டத்தில், பிரச்சாரத்தின் பல்வேறு அம்சங்களுக்கு உறுதியான இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டன. தற்போது நடைபெற்று வரும் செயல்படுத்தல் கட்டம், பொது தூய்மை இயக்கங்கள், சிறந்த இட மேலாண்மை, குப்பை அகற்றல், பழைய பதிவுகளை அகற்றுதல் மற்றும் கிடைக்கும் இடங்களை அழகுபடுத்துதல் மூலம் சுத்தமான பணியிடங்கள் மற்றும் சுற்றுப்புறங்களை அடைவதில் கவனம் செலுத்துகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2181529
(வெளியீட்டு அடையாள எண்: 2181529)
***
SS/VK/SH
(रिलीज़ आईडी: 2181681)
आगंतुक पटल : 22