தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
ஜலந்தர், ஹோஷியார்பூர் நகரங்களில் தொலைத் தொடர்பு சேவையின் தரம் குறித்து இந்திய தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் மதிப்பீடு செய்தது
Posted On:
08 OCT 2025 11:41AM by PIB Chennai
பஞ்சாபின் ஜலந்தர், ஹோஷியார்பூர் நகரங்களில் தொலைத் தொடர்பு சேவையின் தரம் குறித்து 2025 ஆகஸ்ட் மாதத்தில் இந்திய தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் மதிப்பீடு செய்தது. தில்லியில் உள்ள இந்தியத் தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் மண்டல அலுவலகத்தின் மேற்பார்வையின் கீழ் 2025 ஆகஸ்ட் 05 முதல் ஆகஸ்ட் 08 வரை இச்சோதனை நடத்தப்பட்டது. 198.0 கி.மீ. தொலைவிற்கு நகரம் சார்ந்த சோதனை, 9 முக்கிய இடங்கள், 1.3 கி.மீ. தொலைவிற்கு நடைவாயிலான சோதனை 84.6 கி.மீ தொலைவிற்கு நெடுஞ்சாலை சோதனை உள்ளிட்ட சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.
பல்வேறு கைப்பேசிகளை வைத்துள்ள பயனாளர்களின் சேவை அனுபவத்தை பிரதிபலிக்கும் வகையில் 2ஜி,3ஜி,4ஜி மற்றும் 5ஜி தொழில்நுட்பங்களின் தரம் உள்ளிட்டவை குறித்தும் மதிப்பீடு செய்யப்பட்டது. இது குறித்த விவரங்களை www.trai.gov.in என்ற இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2176133
***
SS/IR/AG/KR
(Release ID: 2176178)
Visitor Counter : 7