இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
உலக ஆசிரியர் தினத்தில் தில்லியில் பிட் இந்தியா சைக்கிள் பயணம்
இடுகை இடப்பட்ட நாள்:
05 OCT 2025 4:28PM by PIB Chennai
மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா, இன்று காலை உலக ஆசிரியர் தினத்தையொட்டி, புதுதில்லியில் மேஜர் தியான் சந்த் தேசிய விளையாட்டரங்கில் 43வது பிட் இந்தியா ஞாயிற்றுக்கிழமை சைக்கிள் நிகழ்வை வழிநடத்தினார். இந்த நிகழ்வு நாடு முழுவதும் 10,500-க்கும் மேற்பட்ட இடங்களில் ஒரே நேரத்தில் நடைபெற்றது.
தில்லி முழுவதிலுமிருந்து வந்த ஆசிரியர்கள் உள்பட 1,000-க்கும் மேற்பட்டோர் விளையாட்டு வீரர்கள், உடற்தகுதி செல்வாக்காளர்கள் மற்றும் இளைஞர்களுடன் சேர்ந்து பங்கேற்றனர். ஒலிம்பிக் பதக்கம் வென்ற இந்திய ஹாக்கி அணியின் முக்கிய உறுப்பினர் அபிஷேக் நைன், செஸ் வீரர் தானியா சச்தேவ், ஜாவெலின் வீரர் சச்சின் யாதவ், மற்றும் "இந்தியாவின் புஷ்-அப் மேன்" ரோஹ்தாஷ் சௌத்ரி ஆகியோர் கலந்து கொண்டனர். ஆசிரியர்களுக்கு அர்ப்பணிக்கப்பட்ட துடிப்பான நாடகம், யோகா அமர்வுகள், கயிறு தாண்டுதல், உடற்தகுதி விளையாட்டுகள் மற்றும் குழந்தைகளுக்கான பங்கேற்பு நிகழ்வுகளும் இடம்பெற்றன.
கூட்டத்தில் உரையாற்றிய டாக்டர் மாண்டவியா, இந்த முன்முயற்சியை உண்மையான நாடு தழுவிய இயக்கம் என்று அழைத்தார். "இந்த இயக்கத்தின் மூலம், 10,500-க்கும் மேற்பட்ட இடங்களில் லட்சக்கணக்கான பொதுமக்கள் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் தங்களை ஆரோக்கியமாக வைத்திருக்க சைக்கிள் ஓட்டுகிறார்கள். நமது பிரதமர் திரு நரேந்திர மோடி வழங்கிய பிட் இந்தியா பார்வையின் கொண்டாட்டமாக இது மாறிவிட்டது" என்று அவர் கூறினார்.
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம், சைக்கிள் பெடரேஷன் ஆஃப் இந்தியா, யோகாசன பாரத் மற்றும் மை பாரத் ஆகியவற்றுடன் இணைந்து ஏற்பாடு செய்த இந்த சைக்கிள் இயக்கம், இந்தியாவின் மிகவும் தாக்கம் செலுத்தும் உடற்தகுதி பிரச்சாரங்களில் ஒன்றாக உறுதியாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2175022
***
(Release ID: 2175022)
SS/VK/KR
(வெளியீட்டு அடையாள எண்: 2175262)
வருகையாளர் எண்ணிக்கை : 25