பிரதமர் அலுவலகம்
ஷியாம்ஜி கிருஷ்ண வர்மாவின் பிறந்தநாளில் பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு மரியாதை செலுத்தினார்
प्रविष्टि तिथि:
04 OCT 2025 9:16AM by PIB Chennai
இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்திற்கு ஷியாம்ஜி கிருஷ்ண வர்மா ஆற்றிய உறுதியான அர்ப்பணிப்பைப் போற்றும் வகையில், பிரதமர் திரு நரேந்திர மோடி அவரது பிறந்தநாளில் அவருக்கு மரியாதை செலுத்தினார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், பிரதமர் திரு நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளதாவது:
“நாட்டு மக்கள் அனைவரின் சார்பாக, பாரத மாதாவின் செயல்வீரர் ஷியாம்ஜி கிருஷ்ண வர்மாவுக்கு அவரது ஜெயந்தியில் மரியாதைக்குரிய அஞ்சலிகள். சுதந்திரப் போராட்டத்தில் அவர் ஆற்றிய வீரம், அர்ப்பணிப்பு மற்றும் சேவை மனப்பான்மை என்றும் மரியாதையுடன் நினைவுகூரப்படும். அவரது வீரமும், அச்சமற்ற தன்மையும் வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்குவதற்கு பெரும் உந்து சக்தியாக உள்ளது.”
******
(Release ID: 2174693)
AD/EA/SG
(रिलीज़ आईडी: 2174744)
आगंतुक पटल : 22
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Assamese
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam