சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

போதைப் பொருள் இல்லா இந்தியா இயக்கத்தின் தேசிய அளவிலான போட்டி

Posted On: 24 SEP 2025 12:58PM by PIB Chennai

போதைப் பொருள் இல்லா இயக்கத்தின் 5-ம் ஆண்டையொட்டி மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் தேசிய அளவிலான 3 அடுக்கு போட்டிகளைத் தொடங்கியுள்ளது. போதைப் பொருள் உபயோகத்தால் ஏற்படும் தீமைகள் குறித்து இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் சமூகத்தினரிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதை இந்த முன்முயற்சி நோக்கமாகக் கொண்டுள்ளது. இதற்கான இறுதிப் போட்டி புதுதில்லி பாரத் மண்டபத்தில் நடைபெறும். அதில், பிரதமர் மற்றும் மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சரும் பங்கேற்க உள்ளனர்.

இணையவழி விநாடி வினா, கட்டுரை எழுதுதல், பேச்சுப் போட்டி மற்றும் குழு விவாதம் ஆகிய 3 அடுக்குகளில் போட்டிகள் நடைபெறவுள்ளன. மாவட்ட அளவிலான இணையவழி விநாடி வினா போட்டி 2025 செப்டம்பர் 25 முதல் அக்டோபர் 24 வரை நடைபெறும். கட்டுரை எழுதுதல் போட்டி மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசம் அளவில் 2025 அக்டோபர் 27 முதல் நவம்பர் 7 வரை நடைபெறவுள்ளது. தேசிய அளவிலான பேச்சுப் போட்டி மற்றும் குழு விவாதம், புதுதில்லி பாரத் மண்டபத்தில் 2025 நவம்பர் மாதம் நடைபெறும். இதில் 20 பேர் பங்கேற்க உள்ளனர்.  இப்போட்டியில் பங்கேற்பதற்கான விவரங்களை மைகவ் இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2170496

***

SS/IR/KPG/SH


(Release ID: 2170940) Visitor Counter : 12
Read this release in: English , Urdu , Hindi , Malayalam