தேசிய மனித உரிமைகள் ஆணையம்
மீரட்டில் போதைப்பொருள் மறுவாழ்வு மையத்தில் சித்ரவதையால் ஒருவர் இறந்த விவகாரம் - தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை
Posted On:
27 AUG 2025 12:52PM by PIB Chennai
உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் உள்ள ஒரு போதைப்பொருள் மறுவாழ்வு மையத்தில் 38 வயது நபர் ஒருவர் சித்ரவதை செய்யப்பட்டதால் உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டினர். இந்த செய்தி ஊடகங்களில் வெளியானது. இதையடுத்து இது குறித்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை நடத்துகிறது. 2025 ஆகஸ்ட் 19 அன்று புதுதில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அவர் அழைத்து வரப்பட்டபோது அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.
இந்த விவகாரம் குறித்து இரண்டு வாரங்களுக்குள் விரிவான அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரபிரதேச தலைமைச் செயலாளர், காவல்துறை தலைமை இயக்குநர் ஆகியோருக்கு ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தில் நடத்தப்படும் போதைப்பொருள் மறுவாழ்வு மையங்களின் நிலை குறித்த விவரங்களும் அந்த அறிக்கையில் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
***
(Release ID: 2161121)
AD/SMB/PLM/DL
(Release ID: 2161165)