மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்
சிக்கிம் மாநில தகவல் பாதுகாப்பு அதிகாரிகளுக்கான திறன் மேம்பாட்டு பயிலரங்கு – தேசிய மின் ஆளுகை பிரிவு நடத்தியது
இடுகை இடப்பட்ட நாள்:
17 JUL 2025 11:31AM by PIB Chennai
மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய மின் ஆளுகை பிரிவின் சார்பில், காங்டாக்கில் சிக்கிம் மாநில தலைமைத் தகவல் பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் துணைத் தலைமை தகவல் பாதுகாப்பு அதிகாரிகளுக்குமான ஒருநாள் பயிலரங்கு 14.07.2025 அன்று நடைபெற்றது.
இந்தப் பயிலரங்கத்தின் தொடக்க அமர்வில் பேசிய சிக்கிம் மாநில தகவல் தொழில்நுட்பத்துறைச் செயலாளர் திரு டென்சிங் டி கேளியோன், சிக்கிமில் பாதுகாப்பான டிஜிட்டல் நடைமுறைகளை உருவாக்க மாநில அரசு உறுதி பூண்டுள்ளதாகக் கூறினார். அதனைத் தொடர்ந்து வல்லுநர்கள் பங்கேற்ற பல்வேறு அமர்வுகள் இடம் பெற்றன.
***
AD/TS/PLM/KPG/AG
(வெளியீட்டு அடையாள எண்: 2145482)
வருகையாளர் எண்ணிக்கை : 18