தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தொழிலாளர் அரசு ஈட்டுறுதிக் கழகத்தின் 196-வது கூட்டம் டாக்டர் மன்சுக் மாண்டவியா தலைமையில் இமாச்சலப் பிரதேசத்தின் சிம்லாவில் நடைபெற்றது

Posted On: 27 JUN 2025 4:22PM by PIB Chennai

மத்திய தொழிலாளர், வேலைவாய்ப்பு, இளைஞர் விவகாரம், விளையாட்டுத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா தலைமையில் தொழிலாளர் அரசு ஈட்டுறுதிக் கழகத்தின் 196-வது கூட்டம் இமாச்சலப் பிரதேசத்தின் சிம்லா நகரில் இன்று (27.06.2025) நடைபெற்றது.

தொழிலாளர் அரசு ஈட்டுறுதிக் கழகத்தின்  செயல்பாடு, உள்கட்டமைப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட பல முக்கிய திட்டங்கள் குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு, ஒப்புதல் அளிக்கப்பட்டது. 

தொழில் நிறுவனங்களின் உரிமையாளர்கள், பணியாளர்களின் பதிவை ஊக்குவிக்கும் ஸ்பிரீ திட்டத்தை மீண்டும் தொடங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. 2016-ல் அறிமுகப்படுத்தப்பட்ட இந்தத் திட்டம் 88,000-க்கும் மேற்பட்ட உரிமையாளர்கள் மற்றும் 1.02 கோடி ஊழியர்களின் பதிவை வெற்றிகரமாக மேற்கொண்டிருந்தது.  புதுப்பிக்கப்பட்ட இந்த திட்டம் 2025 ஜூலை 1 முதல் டிசம்பர் 31, வரை செயல்பாட்டில் இருக்கும். இதன் மூலம் இந்தத் திட்டத்தில் இதுவரை பதிவு செய்யாத உரிமையாளர்கள், வேலையிலிருந்து நீக்கப்பட்ட தொழிலாளர்கள்,  ஒப்பந்த மற்றும் தற்காலிக ஊழியர்கள் உள்ளிட்டோர் தொழிலாளர் அரசு ஈட்டுறுதிக் கழக சட்டத்தின் கீழ் சேர ஒரு முறை வாய்ப்பு வழங்கப்படுகிறது.

இந்தக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் திருமதி டோலா சென், திரு என்.கே. பிரேமச்சந்திரா, தொழிலாளர் அரசு ஈட்டுறுதிக் கழக இயக்குநர் திரு அசோக் குமார் சிங், மத்திய, மாநில அரசுகளின் முதன்மைச் செயலாளர்கள், மூத்த அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2140169

***

AD/TS/GK/AG/DL


(Release ID: 2140237)
Read this release in: English , Urdu , Hindi , Gujarati