நிதி அமைச்சகம்
வங்கிப் பணியாளர் தேர்வு நிறுவனமான ஐ.பீ.பி.எஸ். நடத்தும் தேர்வுகளில் விண்ணப்பதாரர் சரிபார்ப்புக்கு அந்நிறுவனம் ஆதார் அங்கீகாரத்தை பயன்படுத்த அரசு ஒப்புதல் அளித்துள்ளது
Posted On:
26 JUN 2025 2:59PM by PIB Chennai
வங்கிப் பணியாளர் தேர்வு நிறுவனம் நடத்தும் தேர்வுகளில் விண்ணப்பதாரர் சரிபார்ப்புக்கு அந்நிறுவனம் ஆதார் அங்கீகாரத்தை பயன்படுத்த அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கான அறிவிக்கையை நிதியமைச்சகத்தின் நிதிச்சேவைகள் துறை அரசிதழில் வெளியிட்டுள்ளது. அறிவிக்கைக்கான இணைப்பு : https://egazette.gov.in/(S(ah0mujgqxxi0pvmyp24tjyqp))/ViewPDF.aspx
இந்திய தனித்துவ அடையாள ஆணையத்துடனான கலந்தாலோசனைக்குப் பின் மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் ஒப்புதலைத் தொடர்ந்து இந்த அறிவிக்கை வெளியிடப்பட்டது.
நல் ஆளுமையை ஊக்கப்படுத்துவதும் தேர்வின் போது ஆள்மாறாட்டம் மற்றும் இதர முறைகேடுகளை தடுப்பதன் மூலம் வங்கி, நிதிச்சேவைகள், காப்பீடு ஆகிய துறைகளில் பணிநியமன நடைமுறையில் நேர்மையை வலுப்படுத்துவதும் இந்த முன்முயற்சியின் நோக்கமாகும்.
இது பணிநியமன நடைமுறையை நியாயமாகவும், வெளிப்படை தன்மையோடும் இருப்பதை உறுதிசெய்வது மட்டுமின்றி மோசடி செய்பவர்களால் ஏற்படும் இழப்புகளிலிருந்து உண்மையான வேட்பாளர்களுக்கு பாதுகாப்பு அளிக்கிறது. அடையாள சரிபார்ப்பை எளிமைப்படுத்துவதுடன், விரைவுபடுத்தவும் செய்கிறது. மேலும் நிர்வாகச் சுமையை குறைத்து ஒட்டுமொத்த தேர்வு மற்றும் தெரிவு நடைமுறையை மக்களுக்கு நம்பிக்கையை அதிகரிக்கச் செய்கிறது.
***
(Release ID: 2139801)
AD/TS/SMB/AG/DL
(Release ID: 2139939)