பாதுகாப்பு அமைச்சகம்
ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்ற 9-வது பாதுகாப்புக் கூட்டுக் குழு கூட்டத்தில் பாதுகாப்புச் செயலாளர் தலைமையில் இந்தியக் குழு பங்கேற்றுள்ளது.
Posted On:
24 JUN 2025 5:34PM by PIB Chennai
ஜோகன்னஸ்பர்க்கில் 2025 ஜூன் 23, 24 ஆகிய தேதிகளில் நடைபெற்ற 9-வது பாதுகாப்புக் கூட்டுக் குழு கூட்டத்திற்காக தென்னாப்பிரிக்கா சென்ற இந்தியக் குழுவிற்கு பாதுகாப்புச் செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் தலைமை தாங்கி சென்றிருந்தார். தென்னாப்பிரிக்கா தரப்பில் அந்நாட்டு பாதுகாப்புத் துறையின் தற்காலிக செயலாளர் டாக்டர் தோபெகிலே கமேட் குழுவிற்கு தலைமை தாங்கினார். இரு தரப்பினரும் தங்கள் பாதுகாப்புத் துறையின் திறன்கள் குறித்து விளக்கினார்கள்.
கூட்டத்தின் முதல் நாளில், தென்னாப்பிரிக்காவுடனான வரலாற்றுச் சிறப்புமிக்க உறவுகளை நினைவு கூர்ந்த பாதுகாப்புச் செயலாளர், இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பில் ஏற்பட்டுள்ள குறிப்பிடத்தக்க முன்னேற்றம் குறித்து திருப்தி தெரிவித்தார். பாதுகாப்பு தளவாட உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் இந்தியாவின் வளர்ந்து வரும் திறமையை அவர் எடுத்துரைத்தார். மேலும் தென்னாப்பிரிக்காவுடனான உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கான உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார்.
கூட்டத்தின் இரண்டாவது நாளன்று, பரஸ்பரம் ஆர்வமுள்ள துறைகள் குறித்து விவாதிக்கப்பட்டன. மேலும் இந்தியா-தென்னாப்பிரிக்கா உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கான முன்னோக்கி செல்லும் வழிமுறைகள் குறித்து அடையாளம் காணப்பட்டன. இச்சந்திப்பின் போது நீர்மூழ்கிக் கப்பல் ஒத்துழைப்பு தொடர்பாக புதிதாக கையெழுத்திடப்பட்ட இரண்டு ஒப்பந்தங்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2139247
***
TS/IR/RR/DL
(Release ID: 2139320)