மக்களவை செயலகம்
azadi ka amrit mahotsav

ஜனநாயக செயல்முறைகளை வலுப்படுத்த நிறுவன ஒருங்கிணைப்பு, நிதி பொறுப்புடைமை மற்றும் தொழில்நுட்பத்தால் இயக்கப்படும் ஆளுகையை மக்களவை தலைவர் வலியுறுத்தியுள்ளார்

Posted On: 24 JUN 2025 4:43PM by PIB Chennai

மும்பையில் உள்ள மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் திங்கள்கிழமை அன்று மக்களவைத் தலைவர் திரு ஓம் பிர்லா தொடங்கி வைத்த நாடாளுமன்றம் மற்றும் மாநில, யூனியன் பிரதேச சட்டப் பேரவைகளின் மதிப்பீட்டுக் குழுக்களின் தலைவர்களின் இரண்டு நாள் தேசிய மாநாடு இன்று நிறைவடைந்தது.

இந்நிறைவு அமர்வில் உரையாற்றிய மக்களவைத் தலைவர் திரு ஓம் பிர்லா, ஜனநாயக செயல்முறைகளை வலுப்படுத்த நிறுவன ஒருங்கிணைப்பை வளர்ப்பது, நிதி பொறுப்புடைமையை மேம்படுத்துவது மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த ஆளுகையை ஏற்றுக்கொள்வதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். திறமையான முறையில் கொள்கைகளைச் செயல்படுத்தல் மற்றும் குடிமக்கள் சார்ந்த நிர்வாகத்திற்கு பல்வேறு ஆளுகைக் குழுக்களிடையே தடையற்ற ஒருங்கிணைப்பு மிக முக்கியமானது என்பதை அவர் எடுத்துரைத்தார். வெளிப்படைத்தன்மை மற்றும் நிதிப் பொறுப்புடைமையை வலியுறுத்திய மக்களவைத் தலைவர், பொது நிதியை விவேகத்துடன் பயன்படுத்துவதை உறுதி செய்வதற்கான வலுவான வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டார். மேலும், நிர்வாகத் திறனை மேம்படுத்தவும், நிகழ்நேர பொது சேவை வழங்கலை ஊக்குவிக்கவும், டிஜிட்டல் யுகத்தில் சிறந்த ஆளுகையின் மதிப்புகளை நிலைநிறுத்தவும் மேம்பட்ட டிஜிட்டல் தொழில்நுட்பங்களை ஒருங்கிணைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

நிர்வாகத்தில் பொறுப்புடைமை மற்றும் புதுமைகளை வலியுறுத்திய அவர், மத்திய அரசிலோ அல்லது மாநில அரசுகளிலோ உள்ள நாடாளுமன்றக் குழுக்கள் அரசை எதிர்க்காமல், மாறாக ஆதரவான மற்றும் திருத்தங்களை மேற்கொள்ளச் செய்து, ஆக்கபூர்வமான வழிகாட்டுதலை வழங்க வேண்டுமென்று வலியுறுத்தினார். நன்கு ஆய்வு செய்யப்பட்ட பரிந்துரைகளை வழங்குவதன் மூலமும், நிர்வாகத்திற்கும் சட்டப்பேரவைக்கும் இடையே ஒரு பாலமாகச் செயல்படுவதன் மூலமும், இந்தக் குழுக்கள் வெளிப்படையான, பொறுப்புணர்வுடன் மற்றும் பயனுள்ள நிர்வாகத்திற்கு பங்களிக்கின்றன என்று அவர் மேலும் கூறினார். நாடாளுமன்ற ஜனநாயகத்தின் தூண்களாக குழுக்களின் பங்கை வலுப்படுத்துவதன் மூலம், ஒத்துழைப்பு மற்றும் பொறுப்புணர்வை நிலைநிறுத்துமாறு உறுப்பினர்களை மக்களவைத் தலைவர் வலியுறுத்தினார். நாடாளுமன்றத்தின் மதிப்பீட்டுக் குழுக்களுக்கும் மாநிலங்கள்/யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளுக்கும் இடையே ஒருங்கிணைப்பு அவசியம் என்று அவர் அழைப்பு விடுத்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2139227

***

AD/TS/IR/RR/KR/DL


(Release ID: 2139314)