நித்தி ஆயோக்
தரவுகளின் தரத்தை மேம்படுத்துவதற்கான எதிர்கால நடவடிக்கைகள் குறித்த முன்னோட்டம்: நித்தி ஆயோக்கின் காலாண்டு ஆய்வு முடிவுகள்
Posted On:
24 JUN 2025 12:32PM by PIB Chennai
தரவுகளின் தரநிலையை மேம்படுத்துவதற்கான எதிர்கால நடவடிக்கைகள் குறித்த காலாண்டு ஆய்வுகளின் முடிவுகளை நித்தி ஆயோக் வெளியிட்டுள்ளது. டிஜிட்டல் நிர்வாக நடைமுறைகளை வலுப்படுத்துவதற்கும், மக்களின் நம்பிக்கையை உறுதி செய்யும் வகையிலும், சிறந்த சேவைகளை வழங்குவதை உறுதி செய்யவும் வலுவான கட்டமைப்புடன் கூடிய தரமான தரவுகளின் அவசியம் குறித்து இந்த அறிக்கை விரிவாக எடுத்துரைக்கிறது.
குறைபாடுகள் கொண்ட தரவுகளால் ஏற்படும் சவால்கள் குறித்தும் இந்த அறிக்கை விரிவான ஆய்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது. எளிதான நடைமுறையில் தரவுகளை பயன்படுத்துவதற்கான கருவிகளை அறிமுகப்படுத்துவதற்கும், தரவுகளின் பண்புகளை அளவிடுவதற்கும், கண்காணிப்பதற்கும் மதிப்பீடு செய்வதற்கான நடைமுறைகனை மேம்படுத்துவது குறித்தும் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வெளியீட்டு நிகழ்ச்சியில் நித்தி ஆயோக்கின் தலைமை செயல் அதிகாரி, திரு பி.வி.ஆர். சுப்ரமணியம் எம்ஓஎஸ்பிஐ செயலாளர் டாக்டர் சௌரப் கார்க் மற்றும் நித்தி ஆயோக் அமைப்பின் உறுப்பினர் திருமதி தேப்ஜானி கோஷ் உள்ளிட்ட மூத்த அரசு அதிகாரிகள், தரவு நிர்வாகத்தை வலுப்படுத்துவது குறித்து பரஸ்பரம் தங்களது கருத்துகளை பரிமாறிக் கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சகங்கள்/துறைகளைச் சேர்ந்த மூத்த அதிகாரிகள், கள நிபுணர்கள், நித்தி ஆயோக் அமைப்பின் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
******
(Release ID: 2139136)
AD/TS/SV/SG/KR
(Release ID: 2139259)