பெருநிறுவனங்கள் விவகாரங்கள் அமைச்சகம்
இந்திய பெருநிறுவன விவகாரங்கள் கல்வி நிறுவனம் (ஐஐசிஏ), நாக்பூரில் மூன்று நாள் நிறுவன சமூகப் பொறுப்புடைமைத் திறன் மேம்பாட்டு பயிற்சியைத் தொடங்கியது
Posted On:
23 JUN 2025 4:24PM by PIB Chennai
இந்திய பெரு நிறுவன விவகாரங்கள் கல்வி நிறுவனம் (ஐஐசிஏ), நாக்பூரில் உள்ள தேசிய பாதுகாப்பு உற்பத்தி அகாடமியில்., முனிஷன்ஸ் இந்தியா லிமிடெட் அலுவலர்களுக்கான மூன்று நாள் சமூகப் பொறுப்புடைமை (சிஎஸ்ஆர்) திறன் மேம்பாட்டு பயிற்சியைத் தொடங்கியது.
இந்த நிகழ்வின் முக்கிய சிறப்பம்சமாக, ஐஐசிஏ மற்றும் தேசிய பாதுகாப்பு உற்பத்தி அகாடமி இடையே ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. ஐஐசிஏ-வின் தலைமை இயக்குநர் & தலைமை நிர்வாக அதிகாரி திரு ஞானேஷ்வர் குமார் சிங்கின் தொலைநோக்குப் பார்வை கொண்ட வழிகாட்டுதல் மற்றும் உந்துதலால் இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. அவரது தலைமைத்துவம் தாக்கத்தை ஏற்படுத்தும் நிறுவன ஒத்துழைப்புகளை உருவாக்குவதிலும் கூட்டு திறன் மேம்பாட்டு முயற்சிகளை விரிவுபடுத்துவதிலும் முக்கிய பங்கு வகித்துள்ளது.
ஜூன் 9, 2025 அன்று பயிற்சியின் தொடக்க அமர்வுக்கு சற்று முன்பு, ஐஐசிஏ-வின் வணிக சுற்றுச்சூழல் பள்ளியின் இணைப் பேராசிரியரும் தலைவருமான டாக்டர் கரிமா தாதிச் மற்றும் என்ஏடிபி-யின் தலைமைப் பொது மேலாளர் டாக்டர் ஜே. பி. டாஷ் ஆகியோர் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் பாதுகாப்பு பொதுத்துறை நிறுவனங்கள் முழுவதும் திறன் மேம்பாட்டு முயற்சிகளை முன்னேற்றுவதற்கும் சிஎஸ்ஆர் நடைமுறைகளில் சிறந்து விளங்குவதற்கும் பகிரப்பட்ட உறுதிப்பாட்டைக் குறிக்கிறது.
டாக்டர் கரிமா தாதிச் தலைமையிலான தொடக்க அமர்வுடன் இந்த நிகழ்ச்சி தொடங்கியது, அவர் ஒரு வணிக கட்டாயமாகவும் சட்டப்பூர்வ இணக்கத் தேவையாகவும் சிஎஸ்ஆரின் முக்கிய பங்கை வலியுறுத்தினார். தேசிய வளர்ச்சி இலக்குகளுடன் சிஎஸ்ஆர் -ஐ ஒருங்கிணைப்பதற்கான புதுமையான அணுகுமுறைகளை ஆராய பங்கேற்பாளர்களை அவர் ஊக்குவித்தார். என்ஏடிபி-யின் தலைமைப் பொது மேலாளர் டாக்டர் ஜே. பி. டாஷ், சிஎஸ்ஆர் துறையில் பங்கேற்பாளர்களின் அறிவுத் தளம், தலைமைத்துவ திறன்கள் மற்றும் செயல்படுத்தும் திறன்களை மேம்படுத்துவதில் பயிற்சித் திட்டத்தின் பொருத்தத்தை எடுத்துரைத்தார். சமூகப் பொறுப்புள்ள பொதுத்துறை தலைமையை உருவாக்குவதில் ஒரு படியாக இந்த முயற்சியை அவர் வரவேற்றார்.
3 நாள் நிகழ்ச்சியில் சிஎஸ்ஆர் கொள்கை உருவாக்கம், தாக்க மதிப்பீடு, நிலைத்தன்மை அறிக்கையிடல் மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை, வாழ்வாதார உருவாக்கம் மற்றும் சமூக உள்ளடக்கம் போன்ற தேசிய முன்னுரிமைகளுடன் சீரமைப்பு உள்ளிட்ட முக்கிய பகுதிகள் அடங்கும்.
இந்த முயற்சி இந்தியாவில் பொறுப்பான நிறுவன நடத்தை மற்றும் நிலையான வளர்ச்சிக்கான பங்குதாரர்களிடையே திறனை வளர்ப்பதற்கான ஐஐசிஏ-வின் நோக்கத்தில் மற்றொரு குறிப்பிடத்தக்க முன்னேற்றப் படியைக் குறிக்கிறது.
-----
(Release ID: 2138907)
AD/TS/KPG/DL
(Release ID: 2139014)