குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
ஜூன் 25, ‘அரசியல் சாசன படுகொலை தினம்’ ஒரு சோகமான நினைவூட்டல்: குடியரசு துணைத் தலைவர்
Posted On:
20 JUN 2025 4:17PM by PIB Chennai
புது தில்லியில் உள்ள குடியரசு துணைத் தலைவர் வளாகத்தில் நடைபெற்ற 7வது தொகுதி மாநிலங்களவை உள்ளகப் பயிற்சி திட்டத்தின் பங்கேற்பாளர்களுடன் குடியரசு துணைத்தலைவர் திரு ஜெகதீப் தன்கர் கலந்துரையாடினார்.
அவசரநிலை எனப்படும் ஒரு முக்கியமான வரலாற்று அத்தியாயத்தை நினைவுபடுத்திய அவர், “இன்று நான் ஏழு நாட்களுக்குள் ஒரு சோகமான ஆண்டு நிறைவாக வரும் ஒரு சம்பவத்தைப் பற்றி சிந்திக்கிறேன். 1975 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியிலிருந்து இந்தியா சுதந்திரம் அடைந்து 28 -வது ஆண்டில் இருந்தது. அது ஜூன் 25, 1975 அன்று நள்ளிரவில் நடந்தது. அப்போதைய பிரதமர் திருமதி இந்திரா காந்தியின் வேண்டுகோளின் பேரில், அப்போதைய இந்திய குடியரசுதலைவர் ஃபக்ருதீன் அலி அகமது, நாட்டில் அவசரநிலை பிரகடனத்தில் கையெழுத்திட்டார். அது முதல் முறையாக நடந்தது.” என்று கூறினார்.
“ஒரு குடியரசு தலைவர், பிரதமர் என்ற ஒரு தனிநபரின், ஆலோசனையின் பேரில் செயல்பட முடியாது. அரசியலமைப்புச் சட்டம் மிகவும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. குடியரசு தலைவருக்கு உதவவும் ஆலோசனை வழங்கவும் பிரதமர் தலைமையிலான அமைச்சர்கள் குழு உள்ளது. இதனை மீறி நடந்த ஒரு நடவடிக்கையின் விளைவு என்ன? இந்த நாட்டின் 100,000க்கும் மேற்பட்ட மக்கள் சில மணிநேரங்களில் சிறையில் அடைக்கப்பட்டனர்” என்பதைச் சுட்டிக்காட்டினார்.
ஜனநாயக நிறுவனங்களின் சறுக்கலைப் பற்றி சிந்தித்துப் பேசிய அவர், “அவர்கள் தங்கள் வீடுகளில் இருந்து இழுத்துச் செல்லப்பட்டனர், நாடு முழுவதும் சிறைகளில் அடைக்கப்பட்டனர். நமது அரசியலமைப்புச் சட்டம் இல்லாமல் போனது. நமது ஊடகங்கள் பணயக்கைதிகளாகப் பிடிக்கப்பட்டன. சில புகழ்பெற்ற செய்தித்தாள்கள் வெற்று தலையங்கங்களைக் கொண்டிருந்தன” என்றார்.
கைது செய்யப்பட்டவர்களின் ஒரு நெகிழ்ச்சியான கதையைப் பகிர்ந்து கொண்ட அவர், “உங்களுக்குத் தெரியுமா, திடீரென்று சிறையில் அடைக்கப்பட்ட இவர்கள் யார்? அவர்களில் பலர் இந்த நாட்டின் பிரதமர்களானார்கள் - அடல் பிஹாரி வாஜ்பாய், மொரார்ஜி தேசாய், சந்திரசேகர். அவர்களில் பலர் முதலமைச்சர்கள், ஆளுநர்கள், விஞ்ஞானிகள் மற்றும் திறமையானவர்கள். அவர்களில் பலர் உங்கள் வயதுடையவர்கள்.” என்றார்.
நீதித்துறையின் பங்கைப் பற்றிக் குறிப்பிட்ட குடியரசு துணைத் தலைவர், அது ஜனநாயகத்தின் அடிப்படை சாராம்சம் கவிழ்ந்த காலம். துரதிர்ஷ்டவசமாக, உச்ச நீதிமன்றம், சட்டத்தின் ஆட்சியை நம்பும் உலகின் எந்தவொரு நீதித்துறை நிறுவனத்தின் வரலாற்றிலும் இல்லாத மிகவும் இருண்ட தீர்ப்பை வழங்கியது. அவசரநிலையை எவ்வளவு காலம் கடைப்பிடிக்க வேண்டும் என்பது நிர்வாகத்தின் விருப்பம் என்பதே அதன் முடிவாக இருந்தது எனக் குறிப்பிட்டார்.
அவசரநிலையின் போது, அடிப்படை உரிமைகள் எதுவும் இல்லை. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு, சர்வாதிகாரத்தை நியாயப்படுத்தியது. எனவே, நீங்கள் அப்போது இல்லாததால் அதை நினைவில் கொள்ள வேண்டும். நான் அங்கு இருந்தேன் என்று அவர் நினைவுகூர்ந்தார்.
ஜூலை 11, 2024 அன்று ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டது. அது ஒரு சரியான காரணத்திற்காக இருந்தது. நமது குடியரசின் 75 வது ஆண்டைக் கொண்டாடுகிறோம். 1947 இல் நாம் சுதந்திரம் பெற்றோம். சுதந்திரத்தின் 75 வது ஆண்டு முன்னதாக வந்தது, ஆனால் நாம் ஒரு குடியரசாக மாறினோம். எனவே, இந்திய அரசியலமைப்பை ஏற்றுக்கொள்வதை, 75 வது ஆண்டாகத் தொடங்கினோம். ஜூன் 25 ஆம் தேதி அரசியல் சாசன படுகொலை தினம் என்று அறிவிக்கப்பட்டது என்று அவர் கூறினார்.
"இந்த நிகழ்வை ஒரு இருண்ட நினைவூட்டலாக மாற்றுவதே இதன் நோக்கமாகும் - நாம் ஜனநாயக விழுமியங்களின் பாதுகாவலர்களாகவும் கண்காணிப்பாளர்களாகவும் இருக்க வேண்டும். எனவே, நீங்கள் அனைவரும் கவனமாக பகுப்பாய்வு செய்யுமாறு நான் கேட்டுக்கொள்கிறேன். அப்போதுதான் ஜனநாயகத்தின் விலையை நீங்கள் அறிந்து கொள்வீர்கள்" என்று அவர் அழைப்பு விடுத்தார்.
மற்றொரு முக்கியமான அம்சத்தை வலியுறுத்திய திரு தன்கர், இந்தியா நல்லிணக்கத்தை நம்பும் ஒரு நாடு, அதாவது உங்கள் விருப்பப்படி, நீங்கள் ஒரு மதத்தைப் பின்பற்றுகிறீர்கள். சர்க்கரை பூசப்பட்ட வாக்குறுதிகள், வசீகரங்கள் மூலம் உங்களை ஒரு மதத்தின் பக்கம் ஈர்க்க முடியாது. அது இந்திய அடையாள உணர்வை அழிப்பதற்கான ஒரு படியாகும். யாருக்கும் தனது விருப்பப்படி ஒரு மதத்தைத் தேர்ந்தெடுக்க உரிமை உண்டு. ஆனால் கவர்ச்சி, தூண்டுதல் இருந்தால், அது சவாலாக இருக்கும். ஒவ்வொரு தனிநபருக்கும் இதில் கவனம் செலுத்த உரிமையும் கடமையும் உள்ளது என தெரிவித்தார்.
மேலும், சர்வதேச யோகா தினத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி கூறிய திரு ஜகதீப் தன்கர், "நாளை சர்வதேச யோகா தினம், . இது நமது பொக்கிஷத்திலிருந்து வெளிப்படுகிறது. இது பாரதத்தில் தோன்றியது. இது நமது வேதங்களில் ஆழமாகப் பதிந்துள்ளது, அதன் சாராம்சம். நமது அதர்வண வேதம் ஆரோக்கியம், நல்வாழ்வு மற்றும் உடலை எவ்வாறு பராமரிப்பது என்பது பற்றிய கலைக்களஞ்சியமாகும். எனவே இந்த நல்ல நடைமுறையை முழு உலகத்துடனும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஏற்பட்டது, அது நமக்கு ஒரு பெரிய சாதனையைப் படைத்தது," என்று கூறினார்.
செப்டம்பர் 2014 இல், பிரதமர் தனது முதல் பதவிக் காலத்தைத் தொடங்கியபோது, ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையில் உரையாற்றும் போது, “யோகா என்பது இந்தியாவின் பண்டைய பாரம்பரியத்தின் விலைமதிப்பற்ற பரிசு” என்று கூறினார்.
இதனைச் சுட்டிக்காட்டிய குடியரசு துணைத்தலைவர், இந்தக் கண்ணோட்டத்தை உலகம் ஏற்றுக்கொண்டதைச் சுட்டிக்காட்டினார். உலகம் மிகக் குறுகிய காலத்தில், 75 நாட்களுக்குள், அதிக எண்ணிக்கையிலான நாடுகள், 177 நாடுகள், ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானமாக ஒன்றிணைந்து, டிசம்பர் 11, 2014 அன்று ஜூன் 21 ஐ சர்வதேச யோகா தினமாக அறிவித்தன. அப்போதிருந்து, இது உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது என அவர் தெரிவித்தார்.
இளம் பயிற்சியாளர்களிடம் உரையாற்றிய அவர், ஜூன் 21 என்பது அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு மையப் புள்ளியாகும். அது உங்கள் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும். அதைப் பயிற்சி செய்யத் தொடங்குங்கள். இது உங்களுக்கு நிவாரணம் அளிக்கும் என்றார்.
மாநிலங்களவை செயலாளர் திரு பி.சி. மோடி, கூடுதல் செயலாளர் டாக்டர் கே.எஸ். சோமசேகர் மற்றும் பிற பிரமுகர்களும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
***
(Release ID: 2137982)
AD/PKV/SG/KR/DL
(Release ID: 2138091)