எஃகுத்துறை அமைச்சகம்
ஐஎன்எஸ் அர்னாலா கப்பலுக்கான சிறப்பு வகை எஃகை செயில் நிறுவனம் வழங்கியது
Posted On:
19 JUN 2025 12:17PM by PIB Chennai
நாட்டின் பாதுகாப்புத் துறை தன்னிறைவு பெற இறக்குமதியை சார்ந்திருப்பதைக் குறைக்கும் வகையில் மிகப் பெரிய எஃகு உற்பத்தி பொதுத்துறை நிறுவனமான செயில், சிறப்பு வகையான எஃகை இந்திய கடற்படைக்கு விநியோகிக்க உள்ளது. முற்றிலும் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்டுள்ள நீர்மூழ்கி எதிர்ப்பு போர்க் கப்பலான 'ஐஎன்எஸ் அர்னாலா கப்பல் கட்டுமானத்திற்கான சிறப்பு வகை எஃகு முழுவதையும் செயில் நிறுவனம் வழங்கியது. இந்தக் கப்பல் ஜூன் 18-ம் தேதி இந்திய கடற்படையில் இணைக்கப்பட்டது. கார்டன் ரீச் ஷிப் பில்டர்ஸ் அண்ட் இன்ஜினியர்ஸ் நிறுவனம் கட்டமைக்கும் இதர ஏழு கப்பல்களுக்கான சிறப்பு எஃகு முழுவதையும் செயில் நிறுவனம் வழங்குகிறது.
நாட்டின் பாதுகாப்பு சாதனங்களின் உற்பத்தியை உள்நாட்டிலேயே மேற்கொள்ளும் வகையில் மத்திய அரசு செயல்படுத்தி வரும் திட்டத்தின் ஒரு பகுதியாக சிறப்பு வகை எஃகை செயில் நிறுவனம் வழங்கியுள்ளது. இது தற்சார்பு இந்தியாவின் இலக்கை எட்டுவதற்கு உதவிடும் வகையிலும் இறக்குமதியைச் சார்ந்திருக்கும் நிலையை குறைக்கும் வகையிலும் இத்தகைய நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இந்த வகையில் செயில் நிறுவனம் ஐஎன்எஸ் விக்ராந்த், ஐஎன்எஸ் விந்தியாகிரி, ஐஎன்எஸ் நீலகிரி, ஐஎன்எஸ் சூரத் போன்ற போர்க்கப்பல்களுக்கும் தேவையான சிறப்புத் தரம் கொண்ட எஃகை செயில் நிறுவனம் ஏற்கனவே வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
****
(Release ID: 2137579)
AD/SMB/SV/KPG/KR
(Release ID: 2137700)