ஆயுஷ்
azadi ka amrit mahotsav

யோகா கனெக்ட் 2025 நிகழ்வு: 'ஒரே பூமி, ஒரே ஆரோக்கியத்திற்கான யோகா' என்ற தலைப்பில் உலகளாவிய உச்சி மாநாடு தில்லியில் நடைபெற்றது

நீரிழிவு, இதய நோய்கள், புற்றுநோய், முதியோர் நலன் என பலவற்றில் யோகா மக்களுக்கு பயன் அளிக்கிறது என ஆய்வுகள் கூறுகின்றன: மத்திய ஆயுஷ் இணையமைச்சர் திரு பிரதாப்ராவ் ஜாதவ்
யோகா கனெக்ட் என்பது யோகாவை வாழ்க்கை முறையாக ஏற்றுக்கொள்வதற்கான ஒரு அழைப்பு: மத்திய கலாச்சாரத் துறை அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத்

Posted On: 14 JUN 2025 6:49PM by PIB Chennai

மத்திய யோகா - இயற்கை மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், புதுதில்லியில் உலகளாவிய முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வான யோகா கனெக்ட் என்ற நிகழ்வை ஏற்பாடு செய்தது. இது 11-வது சர்வதேச யோகா தினம் (IDY) 2025க்கான கவுண்ட்டவுனில் ஒரு முக்கிய மைல்கல்லைக் குறிப்பதாக அமைந்தது. ஒரே பூமிக்கான யோகா, ஒரே ஆரோக்கியம் என்ற கருப்பொருளில் கவனம் செலுத்திய இந்த நிகழ்வு, தனிநபர், உலகளாவிய நல்வாழ்வில் யோகாவின் சக்தியை எடுத்துரைத்ததுகொள்கை வகுப்பாளர்கள், யோகா பயிற்றுநர்கள், விஞ்ஞானிகள், நல்வாழ்வு சிந்தனைத் தலைவர்களை இது ஒன்றிணைத்தது. இந்த நிகழ்வில் யோகா தினத்தின் பத்து ஆண்டு தாக்கத்தின் மதிப்பீட்டை எடுத்துக்காட்டும் ஒரு அறிக்கையும் வெளியிடப்பட்டது.

மத்திய கலாச்சாரத்துறை அமைச்சர் ஸ்ரீ கஜேந்திர சிங் ஷெகாவத், ஆயுஷ் துறை இணையமைச்சர் திரு பிரதாப்ராவ் ஜாதவ் ஆகியோர் குத்து விளக்கேற்றி விழாவைத் தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய மத்திய ஆயுஷ் துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) திரு பிரதாப்ராவ் ஜாதவ், யோகாவை பிரதான நீரோட்டத்திற்கு கொண்டு வருவதற்கான அமைச்சகத்தின் முயற்சிகள் குறித்த செயல்பாடுகளைப் பகிர்ந்து கொண்டார். நீரிழிவு மேலாண்மை, இதய நோய், புற்றுநோய், முதியோர் பராமரிப்பு ஆகியவ பலவற்றில் யோகா பயன் அளிக்கிறது என்பதை ஆய்வுகள் காட்டுகின்றன என்று அவர் கூறினார்.

யோகாவை ஊக்குவிப்பதில் பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையை மத்திய கலாச்சார அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத் பாராட்டினார். யோகா கனெக்ட் என்ற இந்த நிகழ்வு யோகாவை ஒரு செயலாக அல்லாமல் ஒரு வாழ்க்கை முறையாக ஏற்றுக்கொள்ள ஒரு அழைப்பு என்று அவர் கூறினார்.

இந்த நிகழ்வில் பேசிய பதஞ்சலி யோகா பீடத் தலைவர் பாபா ராம்தேவ், 200 நாடுகளில் கிட்டத்தட்ட 200 கோடி மக்கள் யோகா பயிற்சி செய்து வருகின்றனர் என்றார். அடுத்த ஐந்து ஆண்டுகளில், இந்த எண்ணிக்கை 500 கோடியாக உயரும் என்று நம்புவதாக அவர் தெரிவித்தார். இது யோகாவை உலகளவில் ஏற்றுக்கொள்வதை மட்டுமல்ல, உலகளவில் இந்தியாவின் வளர்ந்து வரும் கலாச்சார செல்வாக்கையும் பிரதிபலிக்கிறது என்று அவர் கூறினார்.

****

 

(Release ID: 2136380)

AD/PLM/SG

 

 

 


(Release ID: 2136404)