திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம்
இளைஞர்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் பயிற்சிக்கான தலைமை இயக்குநரகம் மற்றும் ஷெல் இந்தியா இணைந்து பசுமைத் திறன் பயிற்சியை தொடங்கியுள்ளன -மின் வாகனப் பயிற்சிக்கு கவனம்
Posted On:
13 JUN 2025 11:10AM by PIB Chennai
திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகத்தின் கீழ் உள்ள பயிற்சிக்கான தலைமை இயக்குநரகம், ஷெல் இந்தியாவுடன் இணைந்து, மாணவர்கள் மற்றும் பயிற்றுநர்களுக்கு பசுமை ஆற்றல் மற்றும் மின்வாகன இயக்கம் ஆகியவற்றில் எதிர்காலத்திற்கு ஏற்ற வகையில் திறன்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஒரு பசுமைத் திறன் பயிற்சித் திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இதில் மின் வாகனப் பயிற்சிக்கு கவனம் செலுத்தப்படுகின்றது. இந்த முயற்சியை ஷெல் நிறுவனத்தின் பயிற்சி கூட்டாளியான எடுநெட் அறக்கட்டளை, டெல்லி-என்சிஆர், குஜராத், மகாராஷ்டிரா, தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட தொழில்துறை பயிற்சி நிறுவனங்கள் மற்றும் தேசிய திறன் பயிற்சி நிறுவனங்கள் உள்ளிட்டவற்றில் நேற்று முதல் (12.06.2025) செயல்படுத்தியுள்ளது.
பயிற்சிக்கான தலைமை இயக்குநரகம், ஷெல் இந்தியா ஒத்துழைப்பின் கீழ், தேர்ந்தெடுக்கப்பட்ட என்எஸ்டிஐக்கள் மற்றும் ஐடிஐக்கள் ஆகியவற்றில் கட்டமைக்கப்பட்ட பல அடுக்கு மாதிரி மூலம் பசுமை திறன் பயிற்சி வழங்கப்படும். முதல் கட்டமாக, இந்த திட்டத்தில் 240 மணிநேர மேம்பட்ட மின்சார வாகன தொழில்நுட்ப வல்லுநர் பயிற்சி, 4 என்எஸ்டிஐக்களில் செயல்படுத்தப்படும். ஷெல்-ஆதரவு ஆய்வகங்களுடன் கூடிய 12 ஐடிஐக்களில் 90 மணிநேர வேலை சார்ந்த மின்சார வாகன திறன் பயிற்சி மற்றும் இயற்பியல் ஆய்வகங்கள் இல்லாத கூடுதல் ஐடிஐக்களில் 50 மணிநேர அடிப்படை பசுமை திறன் தொகுதிக்கான பயிற்சி ஆகியவை அடங்கும்.
ஷெல், எடுநெட் அறக்கட்டளை மற்றும் பயிற்சிக்கான தலைமை இயக்குநரகம் இணைந்து உருவாக்கிய பாடத்திட்டமானது மின்சார வாகன அமைப்புகள், பழுது அறிதல், பேட்டரி தொழில்நுட்பம், டிஜிட்டல் கருவிகள் மற்றும் பாதுகாப்பு நெறிமுறைகளை உள்ளடக்கியதாகும்.
இந்த முயற்சியின் முக்கிய சிறப்பம்சம், தேர்ந்தெடுக்கப்பட்ட ஐடிஐக்கள் மற்றும் என்எஸ்டிஐக்களில் சிறப்பு மின்சார வாகன திறன் ஆய்வகங்களை நிறுவுவதாகும். இந்த ஆய்வகங்கள் தொழில்துறை தரநிலைகளுடன் இணைக்கப்பட்ட நேரடி பயிற்சி மற்றும் நிபுணர் தலைமையிலான ஆலோசனைகளை வழங்க வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்தத் திட்டம் பங்கேற்பாளர்களுக்கு வேலைவாய்ப்பு ஆதரவு மற்றும் இணை-பிராண்டட் சான்றிதழ்களை வழங்குகிறது, இது பசுமை ஆற்றல் மற்றும் மின்சார வாகனத் துறைகளில் அவர்களின் வேலைவாய்ப்பை அதிகரிக்கிறது.
மத்திய அரசு பூஜ்ஜிய அளவிலான கார்பன் உமிழ்வு குறைப்பு கொள்கைக்கு ஏற்ப பசுமை ஆற்றல் மற்றும் மின்சார வாகன திட்டத்தை தீவிரமாக செயல்படுத்தி வருகிறது. இந்த தேசிய முயற்சிகளை நிறைவு செய்யும் வகையில், டெல்லி, மகாராஷ்டிரா, தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் மின்சார வாகன இயக்கத்திற்கு மாறுவதை விரைவுபடுத்துவதற்கும், உள்ளூர் சூழல் சார் அமைப்புகளை வளர்ப்பதற்கும், பசுமை வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கும் மின்சார வாகனக் கொள்கைகளை அறிமுகப்படுத்தியுள்ளன. இந்த முன்னேற்றங்கள் பசுமை ஆற்றல் மற்றும் மின்சார வாகனத் துறைகளில் திறமையான பணியாளர்களுக்கான வளர்ந்து வரும் தேவையை எடுத்துக்காட்டுகிறது.
பசுமைத் திறன், மின்சார வாகனங்கள் பயிற்சித் திட்டத்தின் முக்கியத்துவம் குறித்துப் பேசிய மத்திய இணை அமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் கல்வித் துறை இணை அமைச்சர் திரு ஜெயந்த் சவுத்ரி, “ஷெல் இந்தியாவுடனான அரசின் ஒத்துழைப்பு, திறன் மேம்பாட்டை நிலைத்தன்மையுடன் இணைப்பதற்கான அரசின் ஆழமான உறுதிப்பாட்டை பிரதிபலிப்பதாக கூறினார்.
வேலைக்குத் தயாராக இருப்பது மட்டுமல்லாமல், காலநிலைக்குத் தயாராக இருக்கும் ஒரு பணியாளர் குழுவை உருவாக்குவதற்கான அரசின் தொலைநோக்குப் பார்வையின் ஒரு பகுதியாக இந்த முயற்சி உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்தி குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2136079
***
AD/TS/GK/SG/KR
(Release ID: 2136097)