விவசாயத்துறை அமைச்சகம்
வளர்ச்சி அடைந்த விவசாயத்துக்கான சங்கல்ப இயக்கத்தின் கீழ், மத்திய அமைச்சர் திரு சிவராஜ் சிங் சவுகான் நாளை, ஜூன் 12, 2025 அன்று குஜராத்தின் பர்தோலியில் உள்ள விவசாயிகளுடன் கலந்துரையாடுகிறார்
Posted On:
11 JUN 2025 6:56PM by PIB Chennai
குஜராத்தின் பர்தோலியில் நாளை (ஜூன் 12, 2025) நடைபெறும் வளர்ச்சி அடைந்த விவசாயத்துக்கான சங்கல்ப இயக்க நிகழ்ச்சியில் மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் திரு சிவராஜ் சிங் சவுகான் கலந்து கொள்கிறார். குஜராத் முதல்வர் திரு பூபேந்திரபாய் படேலும் இந்த நிகழ்வில் பங்கேற்பார்.
இந்த 15 நாள் பிரச்சாரம் மே 29 அன்று ஒடிசாவில் தொடங்கியது. இந்த நாடு தழுவிய பிரச்சாரத்தின் கீழ், திரு சிவராஜ் சிங் சவுகான் இதுவரை ஒடிசா, ஜம்மு, ஹரியானா, உத்தரப்பிரதேசம், பீகார், மகாராஷ்டிரா, உத்தராகண்ட், பஞ்சாப், மத்தியப் பிரதேசம், கர்நாடகா, தெலங்கானா மற்றும் தில்லி ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகளுடன் கலந்துரையாடியுள்ளார். இந்த வகையில், நாளை அவர் குஜராத்தின் பர்தோலியின் விவசாயிகளைச் சந்தித்து அவர்களின் நடைமுறைச் சிக்கல்களைப் பற்றி விவாதிப்பார்.
இந்த நிகழ்ச்சியின் போது, நாடு முழுவதிலுமிருந்து 16 ஆயிரம் விஞ்ஞானிகளைக் கொண்ட 2170 குழுக்களும் மெய்நிகர் முறையில் இணைவார்கள். இதுவரை, இந்தக் குழுக்கள் வளர்ச்சி அடைந்த விவசாயத்துக்கான சங்கல்ப இயக்கத்தின் மூலம் ஒரு கோடியே எட்டு லட்சம் விவசாயிகளை சென்றடைந்துள்ளன.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2135783
****
(Release ID: 2135783)
AD/RB/DL
(Release ID: 2135846)