தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்
மோடி அரசின் 11 ஆண்டுகள்: சமூக பாதுகாப்பிலும் நல்வாழ்விலும் தொழிலாளர் நல அமைச்சகம் மாற்றத்தை ஏற்படுத்துகிறது
Posted On:
11 JUN 2025 6:04PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையின் கீழ் அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் சீர்திருத்தத்தால் இயக்கப்படும் நிர்வாகத்தின் 11 ஆண்டுகளில் தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம், தொழிலாளர் நலன், சமூக பாதுகாப்பு, பொது சுகாதாரம் ஆகியவற்றில் தனது முக்கிய சாதனைகளை எடுத்துரைத்துள்ளது.
இந்த மாற்றத்தில் ஐதராபாதில் உள்ள மூன்று முன்னணி நிறுவனங்கள் தலை சிறந்து விளங்குகின்றன. பர்கத்புராவில் உள்ள ஊழியர் வருங்கால வைப்புநிதி அமைப்பின் பிராந்திய அலுவலகம், டிஜிட்டல் கண்டுபிடிப்பு, கிளைம்களுக்கு விரைவான தீர்வுகள், தீவிரமான குறைதீர்ப்பு நடவடிக்கைகள் மூலம் சேவை வழங்குவதில் புதிய தரநிலையை உருவாக்கியுள்ளது. இங்கு 27 லட்சம் கணக்குகள் நிர்வகிக்கப்படுகின்றன. உயர் வருவாய் மீதான ஓய்வூதிய கிளைம்கள் ம 98% நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளன. இது தேசிய அளவில் ஒரு முன்மாதிரியாக அமைந்துள்ளது.
சனத் நகரில் உள்ள இஎஸ்ஐ மருத்துவ கல்லூரி, பன்னோக்கு சிறப்பு மருத்துவமனை பொது சுகாதாரத்திலும், மருத்துவ கல்வியிலும் முதன்மையானதாக மாறி வருகிறது. 1000 படுக்கை வசதிகள் கொண்ட இந்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனை 72 லட்சத்துக்கும் அதிகமான பயனாளிகளுக்கு நவீன முறையில் நோய் அறிதல் சேவைகளை வழங்குகிறது.
இதற்கிடையே கல்வி உதவித்தொகை, சிகிச்சை உதவி, சமூக பாதுகாப்பு மூலம் 50 லட்சம் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு குறிப்பாக பீடி, திரைப்படம், சுரங்கத் துறைகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் மேம்பாட்டுக்கு தொழிலாளர் நல தலைமை இயக்குநரகம் தொடர்ந்து பாடுபட்டு வருகிறது.
இத்தகைய வெற்றிக் கதைகளை கள அளவில் புரிந்துகொள்ள 2025 ஜூன் 11 முதல் 14 வரை இந்த அமைச்சகம் ஐதராபாதிற்கு செய்தியாளர் சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்துள்ளது. இதன் மூலம் செய்தியாளர்கள் அங்குள்ள அதிகாரிகள், பயனாளிகள், முன்னணி சேவை வழங்குவோர் ஆகியோருடன் நேரடியாக கலந்துரையாடும் வாய்ப்பை பெறுவார்கள்.
****
(Release ID: 2135760)
AD/TS/SMB/SG/DL
(Release ID: 2135799)