நிதி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மும்பையில் இன்று நடைபெற்ற 29-வது நிதி நிலைத்தன்மை மற்றும் மேம்பாட்டு கவுன்சில் கூட்டத்திற்கு மத்திய நிதி மற்றும் பெருநிறுவனங்கள் துறை அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் தலைமை தாங்கினார்

Posted On: 10 JUN 2025 6:05PM by PIB Chennai

மும்பையில் இன்று நடைபெற்ற 29-வது நிதி நிலைத்தன்மை மற்றும் மேம்பாட்டு கவுன்சில் கூட்டத்திற்கு மத்திய நிதி மற்றும் பெருநிறுவனங்கள் துறை அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் மத்திய நிதித்துறை இணையமைச்சர் திரு பங்கஜ் சௌத்ரி, கவுன்சில் உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டத்தில் பேசிய திருமதி நிர்மலா சீதாராமன், மாவட்ட அளவில் சிறப்பு முகாம்கள் நடத்துவதன் மூலம் உரிமை கோராத தொகைகளின் சட்டப்பூர்வ உரிமையாளர்களுக்கு பணத்தை ஒப்படைக்கும் நடைமுறையை முறைப்படுத்துனரும், துறைகளும் விரைவுபடுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார். இந்த இயக்கம், இந்திய ரிசர்வ் வங்கி, செபி, பெரு நிறுவனங்கள் விவகார அமைச்சகம், ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மேம்பாட்டு ஆணையம்,  காப்பீடு ஒழுங்குமுறை மேம்பாட்டு ஆணையம் ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் வங்கிகள், ஓய்வூதிய முகமைகள், காப்பீட்டு நிறுவனங்கள் ஆகியவற்றையும் நினைத்துகொண்டு நடத்தப்பட வேண்டும் என்று அவர் கூறினார். வங்கிகள், பங்குச்சந்தைகள், காப்பீட்டு நிறுவனங்கள் போன்றவற்றில் உரிமைகோராத தொகைகளை உரியவர்களுக்கு ஒப்படைக்கும் முகாமாக இது இருக்கும்.

சாமானிய மக்களின் நலனை கருத்தில் கொண்டு இத்தகைய முகாம்களை விரைந்து நடத்த வேண்டும் என்று திருமதி சீதாராமன் வலியுறுத்தினார்.

இந்தக் கூட்டத்தில் இந்திய ரிசர்வ் வங்கி கவர்னர் திரு சஞ்சய் மல்கோத்ரா, நிதித்துறை செயலாளர் திரு அஜய் சேத், நிதிச்சேவைகள் துறை செயலாளர் திரு நாகராஜூ மட்டிரலா உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2135447

***

AD/TS/SMB/AG/DL


(Release ID: 2135465)