நிதி அமைச்சகம்
16வது நிதி ஆணையத்தின் பகுதிநேர உறுப்பினராக திரு டி. ரபி சங்கர் நியமனம்
Posted On:
07 JUN 2025 3:25PM by PIB Chennai
இந்திய ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் திரு டி. ரபி சங்கரை 16வது நிதி ஆணையத்தின் பகுதிநேர உறுப்பினராக குடியரசுத் தலைவர் நியமித்துள்ளார். அவர் பொறுப்பேற்ற தேதியிலிருந்து ஆணையத்தின் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் வரை அல்லது அக்டோபர் 31, 2025 வரை, எது முன்னதாக வருகிறதோ அதுவரை பதவியில் இருப்பார்.
16வது நிதி ஆணையத்தின் முழுநேர உறுப்பினர்களில் ஒருவரான திரு அஜய் நாராயண் ஜா தனிப்பட்ட காரணங்களுக்காக ராஜினாமா செய்ததன் விளைவாக திரு டி. ரபி சங்கரின் நியமனம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
16வது நிதி ஆணையம், டிசம்பர் 31, 2023 அன்று உருவாக்கப்பட்டது, அதன் தலைவராக நிதி ஆயோக்கின் முன்னாள் துணைத் தலைவர் டாக்டர் அரவிந்த் பனகாரியா நியமிக்கப்பட்டார். 2026 ஏப்ரல் 1 முதல் ஐந்து ஆண்டு காலத்திற்கான தனது பரிந்துரைகளை 2025 அக்டோபர் 31 ஆம் தேதிக்குள் ஆணையம் சமர்ப்பிக்க வேண்டும்.
***
(Release ID: 2134802)
AD/TS/PKV/DL
(Release ID: 2134824)